கொட்டுமுரசு

ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கும் தருணத்தில் இலங்கையர்கள் இழந்த உறவினர்களிற்காக காத்திருக்கின்றனர்

இலங்கையின் வடபகுதியில் உள்ள மன்னாரின் பள்ளிமுனை கிராமத்திலிருந்து மனுவல் உதயச்சந்திரவின் மகன் Anton Seerado  காணாமல்போய் 13 வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது மகனின் வருகைக்காக காத்திருக்கின்றார். இது இன்னமும் முடிவிற்கு வரவில்லை என அவர் அராப் செய்திக்கு தெரிவித்தார். இலங்கையின் 26 வருடகால யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஆணையைப் பெற்று ஒரு வார காலத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைபுலிகளிற்கும் ...

Read More »

ஜெனிவா 2021

புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே. தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் சேர்ந்து அனுப்பிய பொதுக்கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகள் புதிய ...

Read More »

நீர்வை பொன்னையன் குறித்து…….

நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பற்றிய மதிப்பீடுகள் பலவடிவங்களில் வெளிப்பட்டன. அவரது இறுக்கமான கருத்தியல் நிலைப்பாடு காரணமாக அவரைப் பலரும் நெருங்க இயலாதவரெனக் கண்டபோதிலும் சமூக நலநாட்டம்மிக்க பக்கத்தில் எவ்வகையிலும் புறக்கணித்துவிட முடியாதவர் என்ற வகையில் நீர்வை கவனிப்புக்கு உரியவராக இருந்து வந்தார்; ‘இலங்கா இரத்தினா’ விருது வரை அவர் அடையாளப்படுத்தபட வேண்டியவராக இருந்துள்ளார். தனக்கான அரசியல் இலக்கியத் தளத்தில் சமரசத்துக்கு இடமளிக்காதவர் ...

Read More »

தீர்மானம்! அறிக்கைகள்! தலையை சுற்றுகிறது!

முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குச் சென்றபின்னர் போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்கள், வாய்மூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் தமிழர் தரப்பால் பல நாடுகளில் சேகரிக்கப்பட்டன. இன்னும் தொகுக்க வேண்டியவை நிறைய உண்டு. இவற்றைத் தாமதமின்றிச் சேகரித்து மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதனைச் செய்யத் தவறின் 46:1 அர்த்தமில்லாது போய்விடும். 2022 செப்டம்பரில் ஜெனிவாக் கதவும் மூடும் நிலை ஏற்படலாம். ஒரு மாதத்துக்குள் மூன்று நான்கு சிறுசிறு திருத்தங்களுக்குட்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்த மாதம் 23ம் திகதி நிறைவேற்றப்பட்டது. பேரவையின் ...

Read More »

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின்!

 தொல். திருமாவளவன் பேட்டி விசிக தலைவர் திருமாவளவனை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தபோது இரவு சரியாக 12 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் வரிசை கட்டி நிற்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத சிலர் ஆவேசமாக அவரிடம் முறையிடுகின்றனர். பொறுமையாகப் பேசி ஆற்றுப்படுத்துகிறார். திருமாவளவனின் முகம் மட்டுமின்றிக் கை, கால்களிலும்கூட வீக்கத்தைக் கவனிக்க முடிந்தது. “நேரத்துக்குச் சாப்பிடறதும் இல்லை; ஒழுங்கா ஓய்வு எடுக்கிறதும் இல்லை; நேற்று தூங்கப் போகும்போது அதிகாலை நாலு மணி; இன்னைக்கும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை; ...

Read More »

நடுகல்லிலும் கூட இனஒதுக்கல்

ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில் இளையவர்களுக்கு ...

Read More »

சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள்

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் ...

Read More »

தொடர் கதையாகிப்போன தமிழர்களின் பிரச்சனைகளும் தொடர் போராட்டங்களும்

தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வரும் குறிப்பாக “வடக்கு, கிழக்கு” பகுதியில் வாழும் தமிழர்கள் மீது நிலைகொண்டிருக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக வேண்டி தமிழ் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், மிக மிக நீண்ட காலமாகவிருந்து பல அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டும் அதில் “சாண் ஏற முழம் சறுக்குவது” போன்ற தடைகள் ஏற்பட்டும் இறுதியில் தமிழ் இளைஞர், யுவதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள். ஆனாலும் அவ்வாறு மனிதர்களை மனிதர்கள் நேருக்கு நேர் நின்று ஆயுதங்களால் சுட்டு படுகொலைகள் செய்தும் இன்றுவரை ...

Read More »

ஜெனிவாவை நோக்கி கடைசி நேர ‘பேரம்’

தமிழகத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானிகளில் ஒருவரான திருமதி வானதி. சிறிநிவாசன் இம்மாதம் முதலாம் திகதி தனது ருவிற்றரில் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார். இந்தியாவின் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாதம் முதலாம்திகதி கைச்சாத்தாகியுள்ளது என்று. அதற்கொரு படமும் பதிவிட்டுள்ளார்.இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் ( (Sagarmala Development Company Ltd)பயணிகள் கப்பல் தனியார் நிறுவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்தாகியது என்றும் இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் ...

Read More »

தாயின் பசி

ஐ.நா வது  எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் டைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத  அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல.  எனது படம் ஆகிய Quo Vadis Aida  ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித ...

Read More »