செய்திமுரசு

லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி

லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலியானார்கள். ஐரோப்பாவுக்கு படகில் தப்ப முயன்ற 74 அகதிகள் லிபியா அருகே கடலில் மூழ்கி இறந்தனர். ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையால் அந்த நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் சென்று அங்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். இவ்வாறு படகில் செல்லும் போது ...

Read More »

“எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார். அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில், தாய், “நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் ...

Read More »

கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதை – பிரசுரம் வெளியீடு!

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின்  போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பிரசுரத்தினை “விதை குழுமம்”தாயாரித்திருக்கின்றது. இதனை  யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இனிவரும் நாட்களில் இந்த  மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அழுத்தத்தை உருவாக்கும் வகையிலும் இப்பிரசுரம் தாயாரிக்கப்பட்டிருக்கிறது ...

Read More »

நில மீட்புக்காக போராடும் சிறார்கள்! பத்மினி சிதம்பரநாதன்

நில மீட்புக்காக போராடும் சிறார்கள் தாம்படும் அவலங்களை பாடல்களாக கோஷங்களாக கூறி அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன். கேப்பாப்பிலவு நில மீட்புக்காக சிறார்கள் கூட தாங்கள் படுகின்ற அவலங்களை மிகத் தெளிவாக பாடல்களாகவும் கோஷங்களாகவும் கூறி தங்கள் நிலங்களை விடுவிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எந்த ஒரு போராட்டத்திலும் சிறார்கள் தங்கள் அவலங்களை வெளிப்படுத்தியதில்லை. மக்களின் மனிதாபிமான பிரச்சினையை உணர்ந்து சிறுவர்களின் உணர்வை மதித்து அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி ...

Read More »

அவுஸ்ரேலிய அரசு வழங்கும் சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள்

அவுஸ்ரேலிய அரசு வழங்கும் 2018ம் ஆண்டுக்குரிய Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Masters பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவரா என்று அறிந்து கொள்வதற்கும், இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கும் கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லுங்கள். https://www.australiaawardssouthwestasia.org/

Read More »

மெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள அங்காடி ஒன்றின் மீது, இலகுரக விமானம் ஒன்று மோதி விபத்துள்ளானதில் அதில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே குறித்த விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உதவி ஆணையர் ஸ்டெபன் லியேன் (Stephen Leane), விபத்துக்குள்ளான விமானம் Essendon விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது எனவும் ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம் டிரா ஆனது

ஷ்ரேயாஸ் ஐயரின் இரட்டை சதத்தால் இந்தியா, அவுஸ்ரேலியா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், வடே 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று தொடர்ந்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். மிட்செல் மார்ஷ் 75 ரன்னிலும், வடே 64 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2-வது 20 ஓவர் போட்டி கீலாங்கில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை, முதலில் அவுஸ்ரேலியாவை ...

Read More »

மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார்ஜன்ட் ...

Read More »