செய்திமுரசு

எம்ஹெச்370 விமானம் வேறு பகுதியில் விழுந்திருக்கலாம் – அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள்

காணாமல்போன மலேசிய விமானம் 370இன் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமென தோன்றுவதை புதிய சான்று உறுதி செய்வதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு 239 பேர் பயணித்த எம்ஹெச்370 விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டது. இந்த விமானத்தின் பாகங்களை கடலில் தேடிவந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன. உண்மையான போயிங் 777 ரக விமானத்தின் ...

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை, எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே ...

Read More »

அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ரூ.4 கோடியில் தபால் தலை வாங்கினார்!

லண்டனில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும். அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் ...

Read More »

சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த ‘வசந்த மாலை’

அவுஸ்ரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளினால் களை கட்டி இருந்தது. சிட்னியில் பிரபல்யமான சங்கீத ஆசிரியரரான சிறீமதி. மாலதி சிவசீலனின் ‘ஸ்ருதிலயா’ மாணவர்கள் வழங்கிய ‘இசை வேள்வி’ நிகழ்வோடு கலை நிகழ்வோடு ஆரம்பித்திருந்தன. நேர்த்தியான உடை ...

Read More »

அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்த தர்சினி சிவலிங்கம்

ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் மாத்திரமன்றி சர்வதேச அணி ஒன்றில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இதற்கமைவாக தர்சினி அவுஸ்ரேலிய சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார். ஆறுமாத கால ஒப்பந்தஅடிப்படையில் இவர் இந்த அணியில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் ...

Read More »

கொடிய பாம்புகளுடன் அசால்டாக விளையாடும் 2 வயது குழந்தை

பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison Brookeம், Tonyம் பாம்புகள் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்கள் வீட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார்கள். இவர்களின் மகன் Brooke மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவது போல இவன் பாம்புகளுடன் தைரியாக விளையாடுகிறான். பாம்புகள் மட்டுமில்லாமல் பல்லி, உடும்பு போன்ற உயிரினங்களுடன் Jenson சந்தோஷமாக விளையாடுகிறான். இது குறித்து ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. புதிதாக வருவோர், “Australian values” அதாவது அவுஸ்ரேலிய மதிப்புகளை அறிந்துள்ளார்களா எனப் பரிசோதித்து, தேசத்துடனான அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். புதிதாகக் குடியுரிமை பெறுவோர் அவுஸ்ரேலியா நாட்டுக்கான தமது அர்ப்பணிப்பு, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர்கள் பூரண சம்மதத்துடனான மதிப்பளிக்கிறார்களா எனக் கடுமையாகப் பரிசோதிக்கப்படுவார்கள். அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையை இரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த முறைக்கு பதிலாக தற்காலிக ...

Read More »

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீடு

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் ஏதிலிகள் கழகத்தின் செயற்பாட்டாளர் திரு அருந்தவம் பகீரதன் தலைமையில் நடைபெற்ற ...

Read More »

அர்ஜெண்டினாவில் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு

அர்ஜெண்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அர்ஜெண்டினாவில் உள்ள அஃகா மகுவோவின் தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பிரபலமான இடத்தில் தான் இந்த முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முட்டைகள் இன்னமும் உயிர்க்கருகளுடன் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்று ...

Read More »

மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

அவுஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் * 1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். அவுஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ...

Read More »