செய்திமுரசு

கஷ்டத்தை நினைவு கூறிய சச்சின்!

ஷார்ஜாவில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக 143 ரன்களும், 134 ரன்களும் விளாசியபோது ஏற்பட்ட கஷ்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். ஷார்ஜா கிரிக்கெட் போட்டி என்றாலே சச்சின் விளாசிய 143 ரன்களும், 134 ரன்களும்தான் நினைவுக்கு வரும். 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கோககோலா கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 22-ந்தேதி இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன், குறிப்பிட்ட ஓவருக்குள் அதிக ரன்கள் ...

Read More »

இரட்டை பிரஜாவுரிமை! அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு நெருக்கடி நிலை!

அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு கடந்த சில வாரங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவர் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் மல்கம் டேர்ன்புல் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஸ்கோம் யூலியா பாங்ஸ் இரட்டை பிராஜவுரிமையை கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக்க பிரஜாவுரிமைக்குரியவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ...

Read More »

ஆட்சிக் கவிழ்ப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது! – சம்­பந்­தன்

ஆட்­சி­யைக் கவிழ்க்­கத் துடிக்­கும் மகிந்த அணி­யின் முயற்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஒத்­து­ழைப்பு வழங்­காது என நேற்­றுச் சபை­யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன். தன்­னை­யும், எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் கடு­மை­யாக விமர்­சித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு சம்­பந்­தன் உட­ன­டி­யா­கவே பதி­லடி கொடுத்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற அத்­தி­யா­வ­சிய பொதுச் சே­வை­கள் சட்­டத்­தின்­கீழ், எரி­பொ­ருள் வழங்­கல் மற்­றும் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்­கும் பிர­க­ட­னம் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது !

அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கிலியன் டிரிக்ஸ் (Gilion Tricks ) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இந்த வாரத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெண்களின் மனித உரிமை, பூர்வீகக்குடிகளின் மனித உரிமை, அகதிகளின் மனித உரிமை என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களது மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்களில் அவுஸ்திரேலியா பின்னோக்கி ...

Read More »

சிட்னியின் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை!

சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கான நுழைவாயிலிற்கு அருகில் காணப்படும் பூக்கடைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த டனுகுல் மொக்மூல் என்ற நபரே இவ்வாறு காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளார். ஆயுதமுனையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெறுகின்றது என்ற தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பின்னர் குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கையில் கத்திரிகோலை ...

Read More »

கிளிநொச்சி விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது!

கிளிநொச்சி-செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. இதன்படி கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் (வயது-59) என்பவருக்கே தேசிய ரீதியில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. விருதுடன், சான்றிதழ் பெற்ற இவருக்கு நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் விருது வழங்கப்பட்டது.

Read More »

எனது கணவர் முன்னாள் போராளி அல்ல!-மனைவி டெனீசியா

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் நேற்று (25 ) காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபரின் மனைவி டெனீசியா தனது கணவர் முன்னாள் ...

Read More »

அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ்

அவுஸ்ரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் திகழ்கிறது என CommSec இன் State of the States (மாநிலங்களின் மாநிலம்) அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம் வர்த்தக முதலீடு, கட்டுமானப்பணிகள், வேலையற்றோர் வீதம், சனத்தொகை வளர்ச்சி உள்ளிட்ட 8 அம்சங்களின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் முதலிடத்திலும் விக்டோரியா இரண்டாமிடத்திலும் ACT மூன்றாமிடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா 8ம் இடத்தில் உள்ளது என இந்த ...

Read More »

லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட,சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மீண்டும்  8 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று (25)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More »

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் பதவி நீக்கம்

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சட்டப்படி அந்நாட்டு அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமையோ, அதற்கு மேற்பட்ட குடியுரிமையோ பெற்றிருந்தால் நாடாளுமன்றத்துக்கு தேர்வாக முடியாது. இந்நிலையில் அந்நாட்டு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மேத்யூ கேனவன் இத்தாலி குடியுரிமை பெற்றிருப்பது தெரிய வந்ததையடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு தனது தாய் இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாகத் தெரிவித்துள்ள கேனவன், ஆனால் தனது தாய் தனக்கும் சேர்த்து இத்தாலியக் குடியுரிமை பெற்றது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ...

Read More »