செய்திமுரசு

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு!

அவுஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு வழங்க உள்ளது. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கும் தேசிய பொறிமுறைமையில் கத்தோலிக்க தேவாலயங்களும் இணைந்து கொண்டுள்ள நிலையில் இவ்வாறு நட்டஈடு வழங்க உள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் குறித்து ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 1950ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவின் 7 வீதமான கத்தோலிக்க மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  பாதிக்கபட்டோருக்கு ...

Read More »

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர். இவர் சமூக வலைத்தளத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை அபுதாபி நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ...

Read More »

எனது 47 வருடகால அரசியலில் கடந்த மூன்று வருடங்களில் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்!

100 நாள் வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செயலாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாதுலுவாவே சோபித தேரரின் 76 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாதுலுவாவே சோபித தேரரின் 76 பிறந்த தின நினைவு தினத்திற்கு எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை. எந்தவொரு தகவலும் எனக்கு வழங்கவில்லை. ...

Read More »

கடவுச்சீட்டு விதிமுறையில் அதிரடி மாற்றம் செய்யும் அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் அதிரடியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக எடுக்கும் புகைப்படத்தில் prescription glasses-மூக்குக் கண்ணாடி அணிந்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான காரணமாக மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தது என கூறப்பட்டுள்ளது. ஆகவே கடவுச்சீட்டு விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க முடியாத நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக ...

Read More »

நடேசனின் 14 வது நினைவுதினம் இன்று யாழில் !

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளடரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 வது நினைவுதினம் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கடந்த 2004 ஆம்ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டு கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவருடைய 14 வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்படி இன்று பிற்பகல் 4.15 மணியளவில் யாழ்ப்பாணம் ...

Read More »

அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சருடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு!

நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்  பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் திகதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட ...

Read More »

நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே!

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு என யாழ்.காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழில்.இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் ...

Read More »

யாழில் செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

காலைக்கதிர் பத்திரிக்கையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்… காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களினால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுப்பட்டது . யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது முன்தினம் அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து அதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.

Read More »

கூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு பரிசு!

உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது. கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்தஎஸ்க்வீயல் பெரேரா  என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து அந்த குறைபாட்டை சரி ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் அப்படி நடந்து கொண்டார்களா?

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி விவரணம் ஒன்றை வெளியிட்டது. அதில் அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் match-fixing எனப்படும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு match-fixing-இல் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென Cricket Australia வின் தலைமை நிர்வாகி James Sutherland கூறியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய வீரர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய அணியின் Test ...

Read More »