செய்திமுரசு

ரெலோ அமைப்பின் ஆயுதக் குவியல் ரமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு!

ராமேஸ்வரம் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி, சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். ராமேசுவரம் அருகே கடற்கரை கிராமமான தங்கச்சி மடத்தில் ஆயுத குவியல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்ஈழ விடுதலை இயக்கம் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவரது ...

Read More »

யாழில் மீண்டும் கிட்டுப்பூங்கா!

யாழில் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு பின்புறமாக காணப்படும் தீயாக தீபம் தீலபனின் சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட சங்கிலியன் பூங்காவாகவுள்ள கிட்டு  பூங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் மாற்றுவதற்கும் நாவாந்துறையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியை நிறுவுவதற்கும் யாழ் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சங்கிலியன் பூங்கா என அழைக்கப்படும் கிட்டுப் புங்காவை மீளவும் கிட்டுப் பூங்கா என பெயர் ...

Read More »

தூத்துக்குடிக்காக சர்வதேச அமைப்பை உருவாக்கும் திருமுருகன் காந்தி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்னை. அதைத் தமிழ்நாட்டின் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதைச் சர்வதேச பிரச்னையாக கொண்டுபோகும் வேலைகளில் இறங்கி ‘தூத்துக்குடி படுகொலைக்கும், தமிழ்நாட்டுக்குமான நீதி’ எனும் தலைப்பில், ஐரோப்பாவில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது மே பதினேழு இயக்கம். தென்னாப்பிரிக்காவில் `மரிக்கானா’ (Marikana) எனும் சிறு நகரத்தில் போராடிய சுரங்கத் தொழிலாளர்களின் மீது 2012-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50. அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு லொன்மின் (Lonmin) என்ற கனிமச் சுரங்க நிறுவனத்துக்கு ...

Read More »

மைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளையாடிய கங்காரு!

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது. பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வானில் ஏற்றி அழைத்து சென்றனர். ...

Read More »

நீண்ட காலம் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி!

ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கை தமிழ் குடும்பத்தை நீண்ட காலத் அங்கேயே தங்குவதற்கான அனுமதியை அந்தநாட்டு பெடரல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை நாடு கடத்தலை எதிர்த்து செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. அதற்கமைய இந்த குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எனினும், நிராகரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு பெடரல் நீதிமன்றத்தால் ...

Read More »

தமிழ் அரசியல் தலைவர்களை ஒரே கூரையில் இணைய செய்த வடக்கு முதல்வர்!

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், அண்மைக்காலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சார்பான அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான அணி என்று இரண்டு துருவங்கள் உருவாகியிருந்த சூழ்நிலையில்,நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பங்கேற் றிருந்தனர். குறிப்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிர கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நாடாளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் ...

Read More »

“ எனது கணவர் விடுதலைப்புலிகளின் உளவாளி என மிரட்டல் விடுக்கின்றனர்“!

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். முகநூல்  ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண ...

Read More »

போராளிகள் ஒன்றிணைய வேண்டும்!” – மேதா பட்கர்

நாட்டின் (இந்தியா) உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் வணிகமயமாகத்தான் இருக்கின்றன. அவை உண்மையான வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதில்லை – மேதா பட்கர் 63 வயதிலும் மக்கள் போராட்டங்களின் ஆதரவுக் குரலாக இந்தியா முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கிறார் மேதா பட்கர். குஜராத்தின் நர்மதா ஆற்றில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இந்தியா முழுவதும் நடைபெறும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், குடிசைகள் வெளியேற்றம் என விளிம்புநிலை மக்களின் குரலாகத் தொடர்ந்து களமாடி வருகிறார். ஸ்டெர்லைட், சென்னைக் குடிசைப் பகுதி வெளியேற்றம் போன்ற பிரச்னைகளுக்காகச் சமீபத்தில் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்ட நவுறு அகதி!

நவுறு அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். palliative care எனப்படும் நோய்த்தணிப்பு நிவாரணத்தைப் பெறுவதற்காக நவறு அகதி ஒருவருக்கு அவுஸ்திரேலியா வர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். பல தரப்புக்களிலிருந்தும் வந்த அழுத்தங்களை அடுத்தே நவுறு அகதியை அவுஸ்திரேலியா அழைத்துவர அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் கோரி வந்த ஆப்கான் ஹஸரா பின்னணி கொண்ட 63 வயதான ஆண் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இவர் சில மாதங்களே உயிர்வாழ்வார் என்று ...

Read More »

டிரம்ப் – கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ...

Read More »