மைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளையாடிய கங்காரு!

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது.

பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வானில் ஏற்றி அழைத்து சென்றனர். கங்காரு சிறிது நேரம் விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.

இதுகுறித்த சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. அதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். காணொளி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கங்காரு கால்பந்து விளையாடி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

தலைநகர் கெனபெர்ராவில் பொதுவாக கங்காரு நடமாட்டம் இருக்காது. ஆனால் இங்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என அதிகாரிகள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.