செய்திமுரசு

சாவகச்சேரியில் வீதியில் சென்ற ஒருவர் குத்திக் கொலை

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். ஐயாத்துரை மோகனதாஸ் (வயது 47) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்ந்துள்ளார். இது தொடர்பில் சாவகச்சேரி காவல் துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

புதிய வகை கொரோனாவுக்கு 7 அறிகுறிகள்

மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. அதன்பின் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதற்கிடையே இங்கிலாந்தில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கடும் ...

Read More »

ஐந்துசந்தியில் போராட்டம் – கஜேந்திரகுமார் பங்கேற்பு!

முஸ்லிம்களின் உடல் தகனத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் – ஐந்துசந்தி பகுதியில் இன்று (25) யாழ் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read More »

லொட்டரியில் 147 கோடி பரிசாக வென்ற மாணவன்

டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது. இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வியாழனன்று இரவு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இவ்வளவு பெரிய தொகை என்பதை அறிந்ததும், நம்ப முடியவில்லை எனவும், உடனையே பெற்றோருக்கு தகவல் தர அழைத்த போது அவர்கள் தூக்கத்தில் இருந்ததால் விடிந்ததும் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். ...

Read More »

எத்தியோப்பியாவில் 100 பேர் படுகொலை

எத்தியோப்பியாவில் இனவாத மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல் அங்கு இன மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் நடந்த இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று எத்தியோப்பிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. பெனி‌ஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் உள்ள கிராமங்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பிரதமர் அபி அகமது ...

Read More »

தமிழ்க் கட்சிகளின் உபாயங்களும் யதார்த்த நிலையும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன. 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை மனித உரிமைகள் அமைப்பின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டம் ஈழத் தமிழரைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானது. அடுத்ததாக என்ன நடைபெறப்போகின்றது என்பது இந்தக் கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும். இலங்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், “நல்லாட்சி” பதவிக்கு வந்த ...

Read More »

யாழ்.முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை ஆதரிக்கத் தயார்

யாழ். மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தமது கட்சி தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால், அவரையும் ஆதரிக்கத் தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார். “யாழ் மாநகரசபை முதல்வருக்கு ஆர்னோல்ட்டைத் ...

Read More »

மருதனார்மடம் பொதுச்சந்தையில் பரவிய வைரஸ் மிகவும் வீரியம் கூடியது

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் நாள்களில் கிறிஸ்மஸ் மற் றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இந்தச் சூழ்நிலை யில் நாட்டில் கொரோனாத் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின் றது. அதிலும் தற்போது யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் ...

Read More »

எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா

  “மனுஸ்தீவில் இருந்ததை விட இங்கு(ஆஸ்திரேலியாவில்) மோசமாக இருக்கிறது. ஒரு மணிநேர ஜிம்- அது மட்டுமே நான் அறையை விட்டு வெளியில் அனுமதிக்கப்படும் நேரம். அவர்கள்(ஆஸ்திரேலிய அரசு) எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோமாலிய அகதியான இஸ்மாயில் ஹூசைன். “கடந்த சில வாரங்களாக யாரும் அறைகளை விட்டு வெளியில் வரவில்லை. அவர்கள் போராட்ட மனநிலையில்  வெளியில் வராமல் இல்லை, நம்பிக்கையின்மையால்- மனச் சோர்வினால் வெளியில் வராமல்  இருக்கிறார்கள்,” என்கிறார் ஹூசைன். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 200 அகதிகள் தொடர்ந்து அங்கும் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து இக்கருத்தை  சோமாலிய அகதி தெரிவித்திருக்கிறார்.

Read More »

இஸ்லாமாபாத்தில் கோயில் கட்ட இம்ரான்கான் அரசு அனுமதி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயிலைக் கட்டுவதற்கு கடந்த ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் குறித்த பணியானது சில அரசியல் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டது. இந் நிலையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு பின்னர் தற்போது அந் நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு இஸ்லாமாபாத்தில் குறித்த கோயிலைக்  கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில்  கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படுமென செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More »