செய்திமுரசு

160 இந்திய யூதர்கள் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பினெய் மெனாஷே இனத்தவரை, யூதர்களாக அங்கீகரிப்பதாக, இஸ்ரேலைச் சேர்ந்த யூதத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின், இந்த இன மக்கள், இஸ்ரேலுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இதுவரை 2500-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். இந்தநிலையில் ...

Read More »

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்

குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுடன்  தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் சஞ்ஜெய் ராஜரத்னம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். 48 ஆவது சட்டமாதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜெய் ராஜரத்னம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார் புதிய சட்டமாதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ல் ...

Read More »

யாழில் இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்

கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளில் 6,072 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் ...

Read More »

14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்பினர்

4-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணிகளை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேறுவழியின்றி கடந்த மாதம் 4-ந் தேதி போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விரைவாக அனுப்பி வைத்தது. இந்தியாவில் ...

Read More »

தாதிமார் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டம்

அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன்படி இன்று சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. மெதிவத்த ஊடகங்களிடம் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளனர் எனவும், இதனாலேயே தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் மெதிவத்த குறிப்பிட்டார். இந்தத் தீர்மானத்துக்கமைய இன்று காலை முதல் நாளை காலை வரையில் பணிகளில் இருந்து தமது சங்கத்தின் ...

Read More »

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரியாக நிக் ஹாக்லி நியமனம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்த நிக் ஹாக்லி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நிக் ஹாக்லியை நியமித்ததை அவுஸ்திரேலிய கிரிக்கெட் திங்களன்று (மே 31) உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டு கடந்த பருவத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதை மேற்பார்வையிடும் ஹாக்லி, 2020 ஜூன் முதல் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். கிரிக்கெட்டுக்கு முன்னர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வணிக பேச்சுவார்த்தைகளின் தலைவராக ஹாக்லி இருந்தார். ...

Read More »

யாழ் பொது நூலக எரிப்பு தமிழர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாச்சார தாக்குதல் , 40 ஆண்டுகள் நிறைவு

( 31/5/1981 இரவு எரிக்கப்பட்டு – 1/6/1981 மாலை ௭ரிந்து முடிந்தது . ) தென்னாசியாவில் இந்திய துணைக்கண்டத்துக்கு அருகேயுள்ள சுமார் 2500 வருடகால பழமையுள்ள தீவுத்தேசம் இலங்கை. கடந்த கால் நூற்றாண்டகளுக்கு மேலாக உள் நாட்டு போர் நடந்த பூமி இது. வடக்கே இருக்கும் தமிழரின் நகரான யாழ்பாணத்தின் ஒரு நெடிய போரின் மௌன சாட்சியான நூலகத்தின் கதை இது. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் ...

Read More »

புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்!

ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலிய வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கர், ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருக்கும் நியூசிலாந்து அரசு

ஆஸ்திரேலி தடுப்பு முகாம் அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழான மீள்குடியேற்றம் நிறைவடைந்த பின்னர், நியூசிலாந்தின் சலுகையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. அதே சமயம், ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இடையேயான சந்திப்பில் இதுகுறித்த விவாதிக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம்,ஆஸ்திரேலியாவின் ...

Read More »

மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்

இந்தியாவில் இருந்து திடீரென டொமினிகாவுக்கு வந்த விமானம், மெகுல் சோக்சியை டொமினிகாவில் இருந்து அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என்று தகவல் பரவியது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) ...

Read More »