செய்திமுரசு

முகமாலையில் மர்மப் பொருள் வெடித்து மாணவன் படுகாயம்!

முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்துள்ளார். குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது, எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன்  18 வயது மாணவனே நேற்று காலை 11.00 மணிக்கு  முகமாலை  தெற்கு கோவானம் காட்டுப்பதிக்குள் வேலி அடைப்பதற்காக கட்டை தறிக்க சென்ற  போது மர்மப் பொருள் வெடித்ததில் கையை இழந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அனர்த்தத்தினால் மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக வைத்திய ...

Read More »

யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்! -நேர்காணல்

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் பெற்றோரையும் அவர்களின் அரவணைப்பையும் இழந்து ஆபத்தில் தவித்த சிறுவர்களுக்கென ஓர் அன்பான இல்லம் அமைக்கவேண்டும் என்ற முயற்சியின் பயனாய் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் 6ஆவது சிறுவர் கிராமமாக யாழ்ப்பாணத்தில் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” அமைக்கப்பட்டது. யாழ். நகரில் இருந்து 4.5 கிலோ மீற்றர் தொலைவில் நாயன்மார்க்கட்டு பிரதேசத்தில் குறித்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!

அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் வரையான காலப் பகுதியிலேயே இவ்விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள், கொள்ளை, பாலியல், ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை Character and General Visa Cancellation சட்டமூலம் கடந்த ...

Read More »

இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல்!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.   பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது. தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் ...

Read More »

மகனை குடும்பமே சேர்ந்து கொலை செய்து புதைத்த கொடூரம்!

அவுஸ்திரேலியாவில் கால்பந்து இறுதிப்போட்டி பார்ப்பதில் ஏற்பட்ட வாய்தகராறின்போது பெற்ற மகனையே கொலை செய்த தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Perth பகுதியை சேர்ந்தவர் Ernest Albert Fisher(67). இவருக்கு 23 வயதில் Matthew என்ற மகன் இருந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் AFL என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட லீக்கின் இறுதி போட்டியை பார்க்கும் பொழுது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவனது தந்தை Ernest திடீரென இரண்டு கூர்மையான கத்தியை எடுத்து, ...

Read More »

கிணற்றிலிருந்து நீரைப்பெறுவதற்கு கடற்படையினருக்கு தடை!

ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞா.லக்ஸ்மன் கடற்படையினர் பொதுமக்களின் பாவனையில் உள்ள நன்னீர் கிணற்றில் கடற்படையினர் நன்னீர் எடுப்பதனை தடை செய்ய வேண்டும் என கோரி பிரேரணையை முன் மொழிந்தார். குறித்த பிரேரணை சபையில் ஏக மனதாக ...

Read More »

தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா!

சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் திகதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் ...

Read More »

மீண்டும் ஐ.நா வில் அரசாங்கத்தை காப்பாற்ற துடிக்கும் கூட்டமைப்பு!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் சிறிலங்கா அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். ஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் ...

Read More »

கருணாநிதி – திருவாரூர் முதல் தலைநகர் வரை – வாழ்க்கை வரலாறு

திமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ...

Read More »

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார். தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில் 27.07.2018 அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் ...

Read More »