செய்திமுரசு

வடகொரியா தலைவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது!

வடகொரியா தலைவருடனான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார். இதையடுத்து, இருநாட்டு உறவில் ...

Read More »

அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள்!

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் குறித்த மலங்காட்டு பகுதியில் வசித்தாலும் பொருளாதார ரீதியில் ...

Read More »

‘அப்பா என அழைக்க வேண்டியவன் “மாமா” என்கிறான்“!

எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து போய் நின்றேன். மனைவி விறைத்து ...

Read More »

அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் Flu, மிக அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தோடு அவுஸ்திரேலியாவில் வழக்கம்போல Flu பரவத்தொடங்கியுள்ளது. அதற்கமைய இவ்வருடம் குறைந்தது நாலாயிரம் பேரையாவது பலியெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் Flu தாக்கம் நினைத்துப்பார்க்கமுடியாதளவு வீச்சடைந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றது. கடந்த வருடம் மார்ச் மாதம் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 3173 என்றும், இந்தவருடம் மார்ச் மாதம் பத்தாயிரம் பேராக பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன. நாட்டு மக்கள் அனைவரையும் தவறாது Flu தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை ...

Read More »

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு – 16 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் உள்ளனர். இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள், கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ...

Read More »

பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்!

அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை செல்லுபடியற்றவையாக்குவதற்கான நடவடிக்கைகளில் தனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச எனினும் எனக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளார். பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளேன்,தற்போது அமெரிக்காவின் பதிலிற்காக காத்திருக்கின்றேன் என ...

Read More »

சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்ப்பதற்கு சிறையிலுள்ளவர்களின் உறவினர்களுக்கு  ஐந்து நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை கைதிகளை  உறவினர்கள் பார்ப்பதற்கு  ஐந்து நாட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு புத்தாண்டு தினத்தன்றும் அதற்கு அடுத்தநாள் மாத்திரம் உறவினர் கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நாட்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக சிறைச்சாலை அதிகாரி ஜெனர் ஜயசிறி தெரிவித்துள்ளார். இதன்படி ...

Read More »

மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!

கூட்­ட­மைப்பு அர­சைப் பாது­காப்­ப­தா­க­வும் தமிழ் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு எதை­யுமே செய்­வ­தில்­லை­யெ­ன­வும் முத­லைக் கண்­ணீர் வடித்­தி­ருக்­கி­றார் எதிர்­கட்­சித் தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச. தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தற்கு அவர் இது­வரை என்ன செய்­தி­ருக்­கி­றார்? என்­பதை அவர் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்ப்­பது நல்­லது. தமி­ழர்­க­ளுக்கு எதை­யும் வழங்கி விடக்­கூ­டாது என்­ப­தில் மகிந்த தீவி­ர­மாக உள்­ளார். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் அடிப்­பட்­டுப் போன­தற்­கும் இவரே முதன்­மைக் கார­ணம். இத்­த­கைய ஒரு­வர் தமி­ழர்­க­ளுக்கு அனு­தா­பம் காட்­டு­வ­தைப் போன்று நீலிக் கண்­ணீர் வடிப்­பதை எவ­ருமே நம்­ப­மாட்­டார்­கள். கூட்­ட­மைப்பு ...

Read More »

கோத்தாவை கையாள்வதற்காக சரத்பொன்சேகாவிற்கு முக்கிய அமைச்சு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களி;ன் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கோத்தபாய ராஜபக்சவின்  பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகாவிற்கு  உள்துறை அமைச்சர் பதவியை வழங்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு   என்பது குறிப்பிடத்தக்கது.   பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து ...

Read More »

நியூசிலாந்து – துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ...

Read More »