செய்திமுரசு

வளி மண்டலத்தில் கரியமில வாயு: 2019-ல் உச்சத்துக்குப் போகும்!

முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டனின் வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கரியமில வாயுவை ஆக்ஸிஜனாக மாற்றும் காடுகளின் பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து வரும் அதே வேளையில், மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியாகும் கரியமிலவாயு அளவும் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பமண்டல பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அங்கு மரங்கள், செடிகளின் வளர்ச்சி அளவு குறைந்து கரியமிலவாயு உறிஞ்சப்படுவதும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, ...

Read More »

பிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா?

ஆண்டு 1999. இடம் ரேபரேலி. பரபரப்பான தேர்தல் நேரம். காங்கிரஸ் வேட்பாளர் கேப்டன் சதீஷ் ஷர்மா. பாஜக சார்பில் அருண் நேரு போட்டியிட்டார். ஆம், ராஜீவ் காந்தியின் உறவினரான அதே அருண் நேரு. 27 வயதான இளம்பெண் அப்போது காங்கிரஸ் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தார். அவரைப் பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும் பெருமளவு கூட்டம் கூடியது. அருண் நேரு ஏற்கெனவே ரேபரேலியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 27 வயதே ஆன இளம்பெண் கூட்டத்தைப் பார்த்து, “என் தந்தைக்கு ...

Read More »

இலங்கையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கூறுவது என்ன ?

அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க்   வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார். கேள்வி: ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மனித உரிமை விவகாரத்தில் ...

Read More »

சம்பள உயர்வைக் கோரி சத்தியாகிரகப் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைக் வழங்கக் கோரி, டிக்கோயா – சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர், அட்டன் – மல்லியப்பு சந்தியில், இன்று சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துமே, குறித்த நபர் மேற்படி சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி பல்வேறு ...

Read More »

மஹிந்தவுக்கு தென் மாகாணத்திலும் மாத்திரம் தான் ஆதரவு!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தென் மாகாணத்தில் மாத்திரமே ஆதரவு காணப்படுகின்றது. எனினும் மேல், மத்திய மற்றும் ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெரும்பாண்மை காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலானாலும் அதில் வெற்றி பெறுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமையாது என தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

அவுஸ்திரேலிய ரோந்துப் படகுகள் சிறிலங்காவில்!

அவுஸ்ரேதிலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை சிறிலங்கா  கடலோரக் காவற்படைக்கு நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது. சிறிலங்கா  கடற்படைக்கு அவுஸ்திரேலியா கடந்த 2014 ஆம் ஆண்டு 38 மீற்றர் நீளம் கொண்ட, பே ரகத்தைச் சேர்ந்த இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கடலோரக் காவல்படைக்கு வழங்கப்பட்டுள்ள, 3 படகுகளும் சிறிய வகையானது எனத் தெரியவந்துள்ளது.

Read More »

2 மாதங்களில் டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு!

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் ...

Read More »

ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு!

ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி  தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் ...

Read More »

48 பந்தில் சதம் விளாசிய சிட்னி தண்டர் வீரர்!

பிக் பாஷ் டி20 லீக் தொடரில சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த பெர்குசன் 48 பந்தில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அதிரடியால் (55 பந்தில் 96 ரன்கள்) ...

Read More »

சம அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை!

200 வருடங்கள் கடந்தும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான இலங்கை பிரஜைகள் எனும் உரிமையை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்தும் அவர்களது சந்ததியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றே நோக்கப்படுகின்றனர்.   தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்கான உரிமை கிடைக்கின்றது. எனினும் பெரும்பான்மை மக்களோடு ஒப்பிடும்போது அவர்களுடனான சம அந்தஸ்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இன்றும் இவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அங்குல நிலத்துக்கு அவர்களால் உரிமை கூற முடியாத காரணத்தினாலேயே தோட்டத்தொழிலாளர்களின் ...

Read More »