அவுஸ்திரேலிய ரோந்துப் படகுகள் சிறிலங்காவில்!

அவுஸ்ரேதிலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை சிறிலங்கா  கடலோரக் காவற்படைக்கு நேற்று வழங்கியுள்ளது.

ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா  கடற்படைக்கு அவுஸ்திரேலியா கடந்த 2014 ஆம் ஆண்டு 38 மீற்றர் நீளம் கொண்ட, பே ரகத்தைச் சேர்ந்த இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கடலோரக் காவல்படைக்கு வழங்கப்பட்டுள்ள, 3 படகுகளும் சிறிய வகையானது எனத் தெரியவந்துள்ளது.