செய்திமுரசு

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்!

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ரணி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் யார் என்ற விவ­காரம் இப்­போது முன்­னை­யதை விடவும் சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர்­களில் ஒரு­வரை போட்­டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது. குறிப்­பாக, ...

Read More »

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் 5 நாடுகள்!

ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக ...

Read More »

தியாகி திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ். காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ். ...

Read More »

ஆஸ்திரேலிய விவசாயிகளைப் பாதித்த விபரீத விளையாட்டு!

ஆஸ்திரேலியாவின் உணவுத்துறை, வேளாண்மை போன்றவற்றில் சமீபகாலத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது இது ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும் அனைவரையும் அச்சுறுத்தியிருக்கிறது கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவை. அப்படித்தான் நியூசிலாந்துக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து பல்வேறு சூப்பர் மார்க்கெட்களுக்கும் சென்றிருக்கின்றன. வாடிக்கையாளர் ஒருவர் நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கியிருக்கிறார். அதனை வீட்டுக்குச் சென்று சாப்பிடப் பார்த்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் பழத்தைக் கடித்தபோது அதனுள்ளே ...

Read More »

லெப்.கேணல் தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு வணக்க ஒழுங்கு!

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு  நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு ...

Read More »

எனக்கு ஒரு பென்சிலே போதும்!- எழுத்தாளன் மன்டோ

உலகின் மிகப்பெரிய மக்கள் புலம்பெயர்தலை இரத்தமும் சதையுமாக தன் படைப்புகளில் படைத்த எழுத்தாளன் மன்டோ. ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கையை, விளையாட்டுவீரரின் வாழ்க்கையை, நடிகரின் வாழ்க்கையை `பயோபிக்’ திரைப்படமாக மாற்றுவதைவிட  எழுத்தாளனின் வாழ்க்கையை சினிமாவாக மாற்றுவது சவாலானது. சினிமாவுக்குப் பொருந்தும் மற்ற துறைகளின் சாதனையாளர்களின் வாழ்க்கை, எழுத்தாளனுக்குப் பொருந்தாது. எழுத்தாளனைப் பாதிக்கும் நிகழ்வுகளையும், அவை வார்த்தைகளாக உயிர் பெறும் நேரங்களையும் எந்த கேமராவாலும் பதிவுசெய்ய முடியாது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்து 70 ஆண்டுகளைக் கடந்தும், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை தேசப்பற்றின் ...

Read More »

இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார். அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் ...

Read More »

பரிந்துரைகள் விரைவில் நிறைவேற்றப்படும்! – சாலிய பீரிஸ்

காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தோம். அப்பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால் காணாமல் போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

‘ஒசாமா’ என அழைத்தனர்! ஆதாரம் இல்லை!- ஆஸ்திரேலியா

ஒசாமா என ஆஸ்திரேலியா வீரர்கள் அழைத்தனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மொயீன் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ‘ஒசாமா’ என்று குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மொயீன் அலி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது. ...

Read More »

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்!

வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை. அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது. 2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு ...

Read More »