செய்திமுரசு

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு!

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததை அமெரிக்கா வரவேற்று உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து இருப்பதை பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ளன. அந்தவகையில் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது. இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-கொய்தா தடை பட்டியலில் சேர்த்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. ...

Read More »

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார் ஸ்மித்!

12-வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் அணியில் இருந்து பிரியா விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது. இந்த தடை முடிந்து பல டி20 தொடரில் விளையாடி வந்தநிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் ...

Read More »

அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு!

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் குறித்த தேவாலையம் அமைந்துள்ளது. குறித்த ...

Read More »

சஹ்ரானின் ஊடக பிரதானி காத்தான்குடியில் கைது !

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரான சஹ்ரானின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த  38 வயதுடைய ஒருவரேயே நேற்ற கைது செய்து சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல் துறை  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை மாலை காவல் துறையினர்  முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மொஹமட் மன்சூர் ...

Read More »

சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதற்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 16 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக், 160 ...

Read More »

தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் !

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை  காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை தற்போது காவல் துறையினர்  வெளியிட்டுள்ளனர். குறித்த பெயர் பட்டியல்  ;- 01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான் 02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் 03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ...

Read More »

தற்கொலைதாரி நசார் முகமது அசாரின் இறுதி நிமிடங்கள்…..!

உலகத்தையே உலுக்கியெடுத்த  தொடர் குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் கடைசி பல மணி நேரக் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியுள்ளது. ஈஸ்டர் பண்டிகையின்போது, கடந்த 21-ம் திகதி கொழும்பு மற்றும் நீர்க்கொழும்பு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கொடூரமான இந்தத் தாக்குதலை, தாங்களே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. ஒன்பது பேர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவ்வமைப்பு கூறியது. அவர்களில், நசார் முகமது அசார் (34 வயது) ...

Read More »

பயங்கரவாதத்தை போதிப்பதாக சாகிர் நாயக்கின் Peace TV க்கு தடை!

பயங்கரவாதத்தை போதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சாகிர் நாயகத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான Peace TV ஐ இலங்கையில் தடைசெய்ய கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்கும் இரு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தொலைக்காட்சி அலைவரிசை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் பிரதான கேபள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்களால் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More »

தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தோரை வைத்தியசாலையில் ஆசி வழங்கிய ரஞ்சித் ஆண்டகை!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலை படையால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவுகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும், மதகுருக்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும், அங்கு சென்ற பேராயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களையும் இறையாசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார். மேலும் நாமும் தற்கொலை படை தாக்குதலில் படுகாயமடைந்த உறவுகள் மிகவிரைவில் சுகம் அடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் பிரார்த்திப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read More »

நியூசிலாந்து தாக்குதலுக்கு முன்பே இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் திட்டமிடப்பட்டது!

நியூசிலாந்து தாக்குதலுக்கு முன்பே இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் திட்டமிடப்பட்டதாக நியூசிலாந்து தகவல் வெளியிட்டு உள்ளது. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் வேதனை இன்னும் அனைவரது நெஞ்சையும் விட்டு விலகவில்லை. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது. இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ...

Read More »