பயங்கரவாதத்தை போதிப்பதாக சாகிர் நாயக்கின் Peace TV க்கு தடை!

பயங்கரவாதத்தை போதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சாகிர் நாயகத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான Peace TV ஐ இலங்கையில் தடைசெய்ய கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்கும் இரு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தொலைக்காட்சி அலைவரிசை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் பிரதான கேபள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்களால் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.