செய்திமுரசு

தடைகளும் உலகளாவிய தொற்றுநோயும்!

மேற்காசிய நாடான ஈரான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் கடுமையாக போராடிக்கொண்டிரும்கின்ற இந்த நேரத்தில் கூட, அதற்கு எதிரான தடைகளை தளர்த்துவதற்கு மறுத்த அமெரிக்காவின் செயல் மனிதாபிமான நெருக்கடிச் சூழ்நிலை முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதாக இருக்கிறது. மேற்காசியாவில் ஈரானிய இஸ்லாமிய குடியரசே வைரஸ் தொற்றுநோயினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்ட்டிருக்கும் நாடாகும். ஏற்கெனவே அங்கு 3,739 பேர் மரணமடைந்திருப்பதுடன் 62,589 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈரான் பல முனைகளில் தோற்றுவிட்டது என்பதே உண்மையாகும். வர்த்தக நிறுவனங்கள், மத நிறுவனங்கள் மற்றும் மக்கள் ...

Read More »

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்

தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவிற்கும், பிரதமர் ...

Read More »

தாராபுர முடக்கத்திற்கான காரணம் என்ன?

இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய புத்தளம் பகுதியைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், ; மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தமை வெளிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டது. இந் நிலையில் குறித்த தொற்றாளர் தராபுரத்தில் மிக நெருக்கமாக பழகிய இரு குடும்பங்கள் விஷேட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தராபுரத்தின் இரு கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 500 பேர் வரையிலானோர் முடக்கப்பட்ட ஊருக்குள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ...

Read More »

தாயின் வயிற்றிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்

  — சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியமானது என தெரிவித்துள்ளனர். பிறந்த சில நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நான்கு புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததையடுத்தே சீன மருத்துவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இவ் நான்கு குழந்தைகளில் மூன்று ...

Read More »

இலங்கையில் 07ஆவது கொரனா நோயாளி உயிரிழந்துள்ளார்!

இலங்கையில் கொரனா வைரஸ் தொற்றுப் பாதித்த 7ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கல்கிசையைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் ஜேர்மனி நாட்டிலிருந்து வருகை தந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 139பேர் வைத்தியசாலைகளில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை மோசடி செய்த பெண்!

இலங்கையில் உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள் என்று கூறி அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை வசூலித்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல நிதி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதால் அவரின் பெயரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிடவில்லை. 550 மில்லியன் டொலர்களை செல்வமாக கொண்டுள்ள இலங்கையின் முன்னணி வர்த்தகரே தமது தந்தை என்று கூறியுள்ள இந்த பெண் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்களையும் தமது மோசடி பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளார். இதன்போது அவர் பண வைப்புகளுக்காகவும் பணத்தை வரவழைத்துக்கொள்ளவும் தமது “கிரான்ட் சுப்பர் ரிச்” ...

Read More »

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- இலங்கை அமைப்பு

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுவருவதாக இலங்கையை சேர்ந்த நுகர்வேர் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சட்டநடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் கொரோனா பரவியமைக்கான பொறுப்பை சீனா ஏற்கவேண்டும் என அவர் டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார். சீனாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்த சட்ட விடயங்களை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டரீதியான காரணங்கள் ...

Read More »

சீனாவுக்கு வந்தவர்களில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு வந்தவர்களில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த எல்லை மூடப்பட்டது. ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு சமீபத்தில் ஏராளமானோர் சென்றனர். அவர்களில் 59 சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த எல்லையை ரஷியாவும், சீனாவும் மூடி உள்ளன. இனிமேல், ரஷிய விமானங்களில் விளாடிவோஸ்டோக் பகுதிக்கு வந்திறங்கும் சீனர்கள், 14 நாட்கள் தனிமை முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்றும், சிறப்பு ...

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி நபர் உடல்நிலை தேறி வருகின்றார்! – வைத்தியர் த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவரது உடல்நிலையில் தொடர்பில் நேற்று இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார் ; என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ...

Read More »

புதிய பட்டுப்பாதை – கொரோனா – சீனா வேகமாக நகர்கிறது……!

முழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள ;கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அதவாது அமெரிக்க இராணுவமே கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியதாக சீன அரச தலைவர்கள் கடுமையாகவும் வெளிப்படையாகவும் குற்றம் சுமத்தினர். மறுப்புறம் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என அழைத்தது மாத்திரமின்றி திட்டமிட்டு முழு உலகிற்கும் சீனா வைரஸை பரப்பியதாக குற்றம் சுமத்தினார். இந்த இரு தரப்பு சொற் சமரின் ஊடாக இதுவரைக்காலமும் பணிப்போராக இருந்த ...

Read More »