செய்திமுரசு

2020 சர்வதேச புக்கர் பரிசு ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஷோகூஃப் அசார்க்கு …!

இந்தோனேஷியாவிலிருந்து 75 பேருடன் கிறிஸ்மஸ் தீவில் கரைசேர்ந்த சிறிய படகில் ஒரு அரசியல் தஞ்சக்கோரிக்கையளராக  ஆஸ்திரேலியா வந்தடைந்த  அகதி எழுதிய The Enlightenment of The Greengage Tree என்ற நாவல் International Booker Prize எனப்படுகின்ற சர்வதேச விருதுப்பட்டியலுக்கு விருதுப்பட்டியலுக்கு தெரிவாகியுள்ளது. ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்காக ஒரு ஊடகவியலாளராக பல தடவைகள் சிறைவைக்கப்பட்ட Shokoofeh Azar இந்த விருதுப்பட்டியலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். ஈரானின் பார்ஸி மொழியி ல் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலுக்கு International Booker Prize விருது கிடைக்குமானால் ஈரானிய ...

Read More »

முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் ஆண்டகை காலமானார்!

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை  காலமானதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. இவர் சிறப்பான எடுத்துக்காட்டான பல்வேறு சேவைகளை செய்துள்ளதோடு, அனைவரிடத்திலும் அன்பும், கருணையும் கொண்டவராக இருந்துள்ளார்.  

Read More »

இரு சகோதரிகளின் உடல்களும் நல்லடக்கம்!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா(வயது 40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பதோடு, ;மற்றையவர் சந்தியோகு ...

Read More »

யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்.மாவட்டத்தில் 6வது நாளாகவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காண ப்படவில்லை. இன்றைய தினம் 10 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையில் 10 பேருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 7 பே ரும் தற்போது நலமாக உள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில் வெற்றிகரமாக 6வது நாளில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

Read More »

அறிகுறிகள் இன்றிய கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க புதிய நடைமுறைகள்!

அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடொன்றினை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இது குறித்து இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது விஷேட வைத்திய நிபுணர் சுதத் ...

Read More »

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் வழி – சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி. இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்! இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அதனால்தான் இந்த ஒற்றை எதிரிக்கு எதிராக உலகளாவிய போர் தொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் எதற்கும் அஞ்சாமல், தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள், பல நாடுகளிலும் இந்த எதிரி வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் உலகுக்கே புரியாத புதிராக இருக்கிறது. ...

Read More »

கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி? என்று பா.ஜனதா எம்.பி.யின் மகள் காணொளி  மூலம் விளக்கம் அளித்துள்ளார். தாவணகெரே நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் சித்தேஷ்வர். இவரது மகள் அஷ்வினி. இவர் தனது மகள் மற்றும் கணவருடன் கயானா நாட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம்(மார்ச்) இவர் கயானா நாட்டில் இருந்து தனது மகளுடன் இந்தியா திரும்பினார். அதையடுத்து அவருக்கும், அவருடைய மகளுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அஷ்வினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ...

Read More »

ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்

அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு பற்றி கேள்விப்பட்டதும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகள் மற்றும் ...

Read More »

மதுப்பழக்கத்தை மறக்கடிக்க உதவுமா ஊரடங்கு?

இந்த ஊரடங்கு காலத்தில் மதுப்பழக்கத்தில் சிக்கியோரை மீட்டெடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மதுபிரியர்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்தநிலையில் மது குடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில் வார்னிஷ் மற்றும் ஷேவிங் லோஷன் போன்றவற்றில் குளிர்பானம் கலந்து குடித்து தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் பட்டாபிராமில் மது பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் ஒருவர் மதுபாட்டில் ...

Read More »

இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ இந்தக் கொரனோ?

கொரனோ வைரஸினால் உலகம் முழுதும் பலியானோர் எண்ணிக்கை 95,000த்தைக் கடந்து விட்ட நிலையில் நாடுகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளன, மக்கள் அரசாங்கங்கள், மருத்துவ நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர், இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார். “ஒற்றுமை மற்றும் உறுதி மட்டுமே இந்த கவலையான நாட்களில் முக்கியமானது” என்று வலியுறுத்தும் கட்டெரெஸ், ஐநாவின் நிதிநிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும், அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே போதிய ரொக்கம் ...

Read More »