செய்திமுரசு

யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் மரணம்

கொரோனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்த கொண்டு வரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள்  யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் எம்.அ.நசார் என்ற நபர் காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய கடந்த 23 ஆம் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று இரவு அவர் ...

Read More »

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல்நிலை நிலவரம் என்ன?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் வெளியி்ட்டுள்ளார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக ...

Read More »

தமிழ் கட்சிகள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றனவா?

சீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. ஆனாலும் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய நெருக்கடிநிலை காணப்படுவதும் உண்மைதான். அரசியலைப்பின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறாயின் யூன் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்பதாக தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் கிடைக்கும் தகவல்களின்படி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவே கூறப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில்தான் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ...

Read More »

இலங்கையில் தொற்றாளர்கள் 368

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.

Read More »

மீண்டும் வார்னர், ஸ்மித்: வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா. ந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளைாடும்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக விளையாடாமல் இருந்தனர். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றியது. இந்நிலையில் வருகிற டிசம்பர்-ஜனவரியில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் ...

Read More »

மக்களின் இறையாண்மையே இறுதி இலக்கு!

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்ற உறுப்பினர்கள் மூவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் ஆணைக்குழு அவசியமற்றதாகும். நாம் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதே எமது ஒரே இலக்காகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலும், உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாலும் ஒரே நோக்கில் ஆணைக்குழுவினால் பயணிக்க முடியாமலிப்பதாகக் கூறப்படுகின்றமை உண்மையா என்று ஊடகவியலாளர்களும் அரசியல் ஆர்வலர்களும் கேள்வியெழுப்புவதாகக் ...

Read More »

அவுஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்காவின் ஊதுகுழல்கள்!

உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை அமெரிக்காவின் ஊதுகுழல் என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதரகம் வர்ணித்துள்ளது. சீனா கொவிட் 19 குறித்து அதிகளவு வெளிப்படைதன்மையுடன் செயற்படவேண்டும், என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கடந்த வாரம் வெளியிட்டுள்ள கருத்து குறித்தே சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை தெரியப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பீட்டர் டட்டன் எனினும் அந்த ஆவணத்தை பார்வையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா வைரசினால் உயிரிழந்த அவுஸ்திரேலியர்களிற்கு பதில் அவசியம் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ...

Read More »

சூப்பர் மார்க்கெட் வேலைக்குச் செல்லும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் ஸ்டா.ஃப்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 80 சதவீத ஸ்டாஃப்கள் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சகஜ நிலை உருவாகி கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகக்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. இதனால் ஸ்டாஃப்கள் வேலை இல்லாமல் ...

Read More »

தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல!

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகவே கொரோனா பாதிப்பு தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பதை 100 வீதம் உறுதியாக கூற முடியும் ;என சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார் தனிமைப்படுத்தல் நிலையங்களின் நிலை தொடா்பாக ஊடகவியலாளா்கள் கருத்துக் கேட்டபோதே அவா் இதனை தெரிவித்தார். இது தொடா்பாக மேலும் அவா் தெரிவிக்கையில், ஒரு ஊா் மக்கள், ஒரு விமானத்தில் பயணித்தவா்கள் என கூட்டம் கூட்டமாக மக்களை ஒரு கூரையின் ...

Read More »

யாழில் சமூகத்தொற்று இல்லையென கூற முடியாது – வைத்தியர் காண்டீபன்

6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் கலாநிதி த. காண்டீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் சமூக மட்டத்தில் தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயேயே கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கொரோனா தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் ...

Read More »