செய்திமுரசு

உணவின்றி காட்டில் மகனுடன் பத்து நாட்கள் சிக்கி கொண்ட பெண்!

காட்டுக்குள் சென்று வெளியே மீண்டும் வர வழித்தெரியாமல் பத்து நாட்கள் அங்கேயே உணவின்றி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து தாயும், மகனும் உயிர்வாழ்ந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மிச்சலே ஸ்மால் (40), இவர் மகன் டைலன் டீனே (9) இருவரும் Hunter Valley பகுதியில் அமைந்திருக்கும் மவுண்ட் ராயல் தேசிய பூங்காவுக்கு கடந்த 2-ஆம் திகதி சென்றுள்ளனர். அது மிகப்பெரிய காட்டு பகுதி என்பதால் வெகுதூரம் உள்ளே சென்ற ஸ்மால் மற்றும் டீனேவுக்கு மீண்டும் வெளியில் வருவதற்கான வழி தெரியவில்லை. ...

Read More »

அகதிகள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுவர்: அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள தடுப்புமுகாம், ஒக்டோபர் 31ம் திகதியுடன் மூடப்படவுள்ளது. இந்நிலையில் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், விரைவில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டவர்கள் விரும்பினால் நவுறுவுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், தாமாகவே முன்வந்து தமது நாடுகளுக்குச் செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் செல்லவில்லையெனில் வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் Michaelia Cash தெரிவித்தார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை!

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு கூறியுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம்!

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த யாழ்.மீசாலையைச் சேர்ந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவருடைய தாயும் தந்தையும் கண்ணீருடன் காத்திருந்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த ராஜேந்திரன் ராஜிப் 2003 ஆம் ஆண்டு மலேசியா சென்றதாகவும் பின் 11 ஆண்டுகள் தொடர்பு இன்றி இருந்துள்ளதாகவும் கூறினர். அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் தான் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம்!

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முதல்தடவையாக வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தியப் பின்னணி கொண்ட பல ஆண்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்கின்றனர். பின் இங்கே தமது மனைவியை அழைத்து வந்து நிர்கதிக்கு உள்ளாக்கி விடுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தவிடயம் தொடர்பாக ரோயல் கமிஷன் விசாரணையின் அடிப்படையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரிய மாநில பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Robin Scott தெரிவித்தார். இதேவேளை வரதட்சணை விவகாரம் குடும்ப வன்முறையின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டு இதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ...

Read More »

அழிவை சந்திக்கப்போகிறது அவுஸ்திரேலியா: வடகொரியா

அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியா ஆதரிக்குமானால் அவுஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவுக்கு அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop மற்றும் ராணுவத்துறை அமைச்சர் Marise Payne ஆகியோர் சென்றிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் அவுஸ்திரேலியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறியிருந்தனர். அவுஸ்திரேலிய அரசின் வெளிப்படையான இந்த ஆதரவு வடகொரியாவுக்கு கடும் சினத்தை உண்டுபண்ணியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவுத்துறை வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான K-C-N-A வழியாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவருடைய சடலம் நேற்று (15) இரவு சிங்கப்பூரிலிருந்து எஸ்.கிவ்.468 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மரணமடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்ததாக விமான நிலைய பொலிஸார் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ...

Read More »

சம்பந்தன் கூறிய கருத்தை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது!

“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று (16)தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...

Read More »

உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும்

உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என போர்த்துக்கள் நாட்டின் தூதுவர் ஹெலனா பரோகோ கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் “அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க உயர்கல்வி அடிப்படையானது. அவர்களே நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பக் கூடியவர்கள். நெருக்கடியில் இருக்கும் அகதிகள் இளைய சமுதாயத்திற்காக நாம் முதலீடு செய்யவில்லை என்றால் போரால் அழிவுண்ட நாடுகளை யார் மீண்டும் கட்டியெழுப்புவார்கள். 150 ...

Read More »

கொழும்பு – தூத்­துக்­குடி கப்பல் சேவை ஆரம்­பிக்க நடவடிக்கை!

கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்­கு­மி­டையில் பய­ணிகள் கப்பல் சேவை­யொன்றை ஆரம்­பிக்க முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­மென துறை­மு­கங்கள் மற்றும்  கப்­பற்­துறை அமைச்சு தெரி­விக்­கின்­றது. இதற்கு  முன்­னரும் இந்த கப்பல்  சேவையை நடத்த விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­ட­போதும் அதற்கு போது­மான விண்­ணப்­பங்கள் கிடைக்­கா­ததால் மீண்டும் விண்­ணப்­பங்கள்  கோரப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சு தெரி­விக்­கின்­றது. இந்த சேவை ஆரம்­பிக்­கப்­பட்டால்  இந்­தி­யா­வுக்கும்  இலங்­கைக்­கு­மி­டையில் பொரு­ளா­தாரம், சுற்­றுலா மற்றும் தொழில்  வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு  தெரிவிக்கின்றது.

Read More »