செய்திமுரசு

தினசரி வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம்

தினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ்  தொற்றை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், விஞ்ஞானிகள் சில வாய்வழி கிருமி நாசினிகள் மற்றும் மவுத்வாஷ்கள் மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். மருத்துவ வைராலஜி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறி இருப்பதவது:– ஆய்வின் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நாய்களால் வேட்டையாடப்படும் ‘கோலா’ கரடிகள்!

அவுஸ்திரேலியாவின் அடையாளமாகத் திகழும் கோலாக் கரடிகள் வேகமாக அழிவைச் சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் மாத்திரமே  காணக்கூடிய பாலூட்டி இனமான கோலா கரடிகள்  தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. தற்போது அங்குசுமார் 50,000 கோலா கரடிகளே  வசிக்கின்றன எனக் கூறப்படுகின்றது. யூகலிப்டஸ் மரங்கள் தான் கோலா கரடிகளின் முக்கிய வாழ்விடம் மற்றும் உணவு. புதிதாக உருவாக்கப்படும் பண்ணைகளால் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றன. மேலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, காட்டத் தீ, கால நிலை மாற்றம், வாழ்விடம் அழிதல் போன்ற காரணங்களால் கோலா ...

Read More »

கடற்படையில் இருந்து விலகினார் யோஷித ராஜபக்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதா னியாக அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை கடற்படையிலிருந்து அதிகாரப் பூர்வமாக இராஜினாமா செய்ததை யோஷித உறுதிப் படுத்தியுள்ளார். தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஒக் டோபர் 10ஆம் திகதி கடற்படையிலிருந்து விலகியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக யோஷித தெரிவித்துள்ளார். இந்நிலையில், 14 வருடங்கள் கடற்படையில் பணியாற் றிய பின்னர் எட்டு மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ய விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் ...

Read More »

சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கு விசாரணை தேவை ஏற்படின் அழைப்பு விடுக்கப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு திங்கட்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு உத்தரவு வழங்கப்பட்டது. இதன் போது கடந்த தவணையில் அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வாக்குமூலம் ...

Read More »

20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு

இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19 ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்சவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே கோத்தாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததோ அதே 19 ஆவது திருத்தத்தை ...

Read More »

பொம்பியோவின் விஜயமும் ஈழத் தமிழர் நிலைப்பாடும்

இரண்டாம் உலகப் போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது. கொரோனாவுக்கு பின்னான உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பாக அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் படைத்த பதவி வகிக்கக்கூடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (United states Secretary of State) மைக் கொம்பியோ (Mike Pompeo) இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இன்றைய நெருக்கடியான சூழலில் ராஜரீக பயணத்தை மேற்கொள்வது ...

Read More »

வீதியில் புலிக்குட்டியுடன் நடைப் பயிற்சி செய்த சிறுமி!

மெக்ஸிகோவில் சிறுமியொருவர் தனது புலிக்குட்டியுடன் வீதியில்  நடைப் பயிற்சி செய்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.   குவாசேவ் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணியிலிருக்க, அவரது மகள், நாயை அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக்குட்டியை அழைத்துச்  சென்றுள்ளார். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Read More »

ரிசாத்திடம் தொடர்ந்து விசாரணை – அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரிஷாத் பதியுதீனிக்கு அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு குடியிருப்பில் மறைந்திருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை மறைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்களான வைத்தியர் மற்றும் அவரது மனைவி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதேவேளை முன்னாள்அமைச்சரை ...

Read More »

விக்கினேஸ்வரனை நேற்றிரவு சந்தித்தார் மாவை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பொதுவான அரசியல் விடயங்களே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலில் கடந்த காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் சந்தித்து –  மனந்திறந்து பேசியிருப்பது தமிழ் அரசியல் பரப்பில் உருவாகிவரும் மாற்றம் ஒன்றைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது.

Read More »

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை

கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா ? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்துகொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப்  போவதில்லை என்பதனை கஜேந்திரகுமார்  நாடாளுமன்றத்தில் வைத்து தெளிவாக கூறியிருக்கிறார். விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் அப்படித்தான் ...

Read More »