வீதியில் புலிக்குட்டியுடன் நடைப் பயிற்சி செய்த சிறுமி!

மெக்ஸிகோவில் சிறுமியொருவர் தனது புலிக்குட்டியுடன் வீதியில்  நடைப் பயிற்சி செய்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

 

குவாசேவ் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணியிலிருக்க, அவரது மகள், நாயை அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக்குட்டியை அழைத்துச்  சென்றுள்ளார். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.