செய்திமுரசு

சுமந்திரன் – சமுதித்த சர்ச்சைக்குரிய பேட்டி

சமுதித்த சமரவிக்கிரம என்ற சிங்கள ஊடகவியலாளரின் பிரத்தியே சனலுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பேட்டி, இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அத்தகைய நிலையில், அப்படி என்னதான் அந்தச் சிங்கள ஊடகத்தில் சுமந்திரன் பேசியிருக்கின்றார் என்ற அவா, எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. அதற்கு விடைதருவதுபோல், அந்தப் பேட்டியின் முழுமையான மொழிபெயர்ப்பை அஜீவன் செய்திருக்கிறார். அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம். சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரைத் தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண ...

Read More »

கொரோனா குறித்து முன்பே கணித்த பில்கேட்ஸ் தகவல்

கொரோனா குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ், தற்போது அதன் தாக்கத்தை மிகவும் பயங்கரமானது என கூறியிருக்கிறார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 2.87 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். இன்னும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. இப்படி மனித குலத்தையே நாசம் செய்து வரும் இந்த தொற்று நோய் குறித்து, உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவன ...

Read More »

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும்!

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது. கொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ...

Read More »

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு

செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி இன்று சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (தி லேடி வித் தி லாம்ப்) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார். ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார். அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான ...

Read More »

கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது!

சிறிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிப்பதுடன் வர்த்தகங்களை மீண்டும் செயல்பட வைக்கும் வகையில் அந்நாட்டு அரசின் மூன்று கட்ட திட்டத்தின்படி உணவகங்களையும் திறக்க சிறிய மாநிலங்கள் அனுமதித்தன. கிட்டத்தட்ட 1 மில்லியன் பேர் மீண்டும் வேலைக்குச் செல்ல வழிவகுக்கும் மூன்று கட்ட செயல்முறையை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார். கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது. தினமும் 20க்கும் குறைவானோருக்கே நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அந்நாட்டில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது. தலைநகர் கேன்பரா உட்பட சில மாநிலங்களில் நேற்று முதல் ...

Read More »

இராணுவ மயமாகும் சிறிலங்கா அரச இயந்திரம்!

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த பத்ராணி வர்த்தக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

நான் ஆஜராக முடியாத நிலை! – சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராக முடியாத நிலையில் தாம் இருப்பதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் . நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் ;ஜூன் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராகும் நிலையில் தான் இல்லையென்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளார். ...

Read More »

நியூசிலாந்து: மே 14-ம் திகதி முதல் உணவு விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி

நியூசிலாந்தில் வரும் 14-ம் தேதி முதல் மால்கள், திரையரங்குகள், கஃபேக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆதர்ன் கூறும்போது, “ஊரடங்குத் தளர்வு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. உணவு விடுதிகள், கஃபேக்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. மதுபான விடுதிகள் மே 21 ஆம் தேதி திறக்கப்படும். பொதுமக்கள் 10 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களைத் ...

Read More »

கண்களின் மூலம் கரோனா பரவுமா?

கரோனா இன்று உலகமெங்கும் அனைவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் கரோனா குறித்த செய்திகள்தாம். ‘கரோனா’ வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கண்களைப் பாதுகாப்பாக வைப்பது குறித்த தகவல்களை உலகெங்கும் உள்ள கண் மருத்துவச் சங்கங்கள் வெளியிட்டு வருகின்றன. கண்ணில் சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா ? ‘மெட்ராஸ் ஐ’ என்று சொல்லப்படும் கண்வலி ‘அடினோ’ வைரஸால் ஏற்படக்கூடியது. இதுபோன்ற கண்சிவப்பு ‘கரோனா’ வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்குமா என்பது சிலரது சந்தேகம். ஒரு வேளை சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா என்றும் கேட்கிறார்கள். ...

Read More »

கூட்டமைப்பின் புதிய வியூகம்

அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், பங்கேற்றதன் மூலம், தற்போதைய அரசாங்கத்துடனான புதியதொரு உறவுக்கு களம் அமைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கடந்த 4ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும், அலரி மாளிகையில் ஒரு கூட்டத்துக்கு அழைத்திருந்தார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்த ஏனைய எதிர்க்கட்சிகள், மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம், நாடாளுமன்றத்தைக் ...

Read More »