செய்திமுரசு

நல்லூர் உற்சவம் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றது!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் கோயிலின் உள்ளே 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும், தண்ணீர் பந்தல், அன்னதான சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினம் என்பதனாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது .

Read More »

டோஹாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்

அந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன,அதற்குள் நான்குமாதத்திற்கு முன்னர் டோஹா கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள் காணப்படுகின்றன. சில நாட்களிற்கு முன்னரே அந்த உடல்கள் டோஹாவிலிருந்து எடுத்துவரப்பட்டன. மார்ச் முதலாம் திகதி தொடர்மாடியொன்றில் இரண்டாம் தளத்தில் இந்த ஈவிரக்கமற்ற கொலைகள் இடம்பெற்றுள்ளன. எனினும் நான்கு நாட்களின் பின்னரேபொலிஸார் உடல்களை மீட்டுள்ளனர். கதவை உடைத்துகொண்டு சென்ற ஆண் ஒருவரினதும் இரண்டு பெண்களினதும், மோசமாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட உடல்களை கண்டுள்ளனர். தந்தை தாய் மகள் ஆகியோரே திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் இடம்பெற்ற ...

Read More »

ஊடகவியலாளர் அகில அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொழும்பில் புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் ஊடகவியலாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கொழும்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(10) ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவை போதைவஸ்து தடுப்பு பிரிவு காவல் துறை  பரிசோதகர் நியுமால் ரங்க ஜீவவினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். இதனை கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஊடக ...

Read More »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேர்காணல் -காணொளி

பொதுத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தினக்குரல் இணையத்துக்கு யாழ். கொக்குவிலிலுள்ள முன்னணியின் அலுவலகத்தில் வைத்து வழங்கிய நேர்காணல்; நன்றி -தினக்குரல்    

Read More »

பிரபல சர்வதேச நிறுவனங்களை ஆளும் 58 இந்திய நிர்வாகிகள்

அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் 11 நாடுகளில் பல முன்னணி நிறுவனங்கள் 58 இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பல திறமை வாய்ந்த நபர் களில் 58 பேர் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் பல முக்கிய நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர். இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி டாலர் அளவில் உள்ளது. இந்நிறுவனங்களின் வருவாய் ஒரு லட் சம் கோடி டாலர். இவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 36 லட்சம். ...

Read More »

வடபகுதியில் இராணுவத்தினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் அதிகரிப்பு

தேர்தலுக்கு முன்னதாக வடபகுதியில் அதிகரித்த இராணுவபிரசன்னம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். வடபகுதியில் படையினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். சில வேட்பாளர்களின் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்று வேட்பாளர்கள் செல்லவுள்ள இடங்கள் அவர்களின் கூட்டங்கள் இடம்பெறவுள்ள இடங்கள் குறித்த விபரங்களை சேகரிக்கின்றனா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்திஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் மாத்திரமே காவல்துறையினருக்கு தகவல் வழங்கவேண்டும் என்பது சட்டம் என சுட்டிக்காட்டியுள்ள ரட்ணஜீவன் ஹூல் ஆனால் ...

Read More »

முகக்கவசம் அணியாதவர்கள் இறுக்கமாக கண்காணிக்கப்படுவர்

வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவதும், சரியான ...

Read More »

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவு: அமெரிக்காவை விமர்சிக்கும் சீனா

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைப் போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதம் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் ...

Read More »

லேசான கரோனா அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மூளை தொடர்பான நோய்கள் கண்டுபிடிப்பு

லேசான கரோனா அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூளை தொடர்பான ஸ்ட்ரோக், மூளை அழற்சி, நரம்பு பாதிப்பு, டெலிரியம் போன்றவை ஏற்பட்டுள்ளதை லண்டனில் உள்ள மருந்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கரோனா வைரஸின் நேரடியான தாக்கத்தால் இந்த நோய்கள் ஏற்படாது ஆனால், உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி முறை தாக்குவதால் இது பாதிப்பு ஏற்படுகிறது என்று லண்டன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் பிரைன்(Brain) எனும் மருத்து இதழலில் இந்த கட்டுரையை லண்டன் மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தகரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஏடிஇம்(Acute disseminated encephalomyelitis ...

Read More »

ஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்!

சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளுக்கான சிறிங்காவின் கொன்சல் ஜெனரலாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார். தனது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஹுலுகல்லே நேற்று(8) சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ஹுலுகல்லே முன்னர் அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Read More »