திரைமுரசு

திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல! – தீபிகா படுகோனே

திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல, எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார். திருமணம் ஆன நடிகைகளை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த வழக்கத்தை சமீபத்தில் உடைத்திருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதுடன், லிப் டு லிப் முத்தக்காட்சி, கவர்ச்சி காட்சிகளில் நடித்து புது டிரெண்ட் உருவாக்கினார். இது ஒர்க் அவுட் ஆனதால் பாலிவுட்டில் தீபிகா ...

Read More »

இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மற்றும் சம்பளம் ...

Read More »

மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்!

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை ...

Read More »

ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு ராட்சசி என தலைப்பு!

எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. `காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். அந்த வகையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு ...

Read More »

சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்யும் இசையமைப்பாளர்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்வதாக இசையமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை. அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார். தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ...

Read More »

சிவகார்த்திகேயன் படத்தில் இளம் இசையமைப்பாளர்!

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் புதிய படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இளம் இசையமைப்பாளர் ஷபீர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த ...

Read More »

பிளாஸ்டிக் விழிப்புணர்வில் சூர்யா!

தமிழக அரசுடன் கைகோத்து சூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசுடன் கைகோத்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா. ஜனவரி 1-ம் திகதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது. இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அக்குறும்படம் அமைந்துள்ளது. ‘மாறலாம், மாற்றலாம்’ என்ற பெயரில் 2டி நிறுவனத்தின் யூடியூப் ...

Read More »

சூர்யா படத்தில் செந்தில் – ராஜலட்சுமி!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில் – ராஜலட்சுமி ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் ...

Read More »

அம்பேத்கர் குறித்த ஆவணப் படம் தயாரிக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்

‘பி.ஆர். அம்பேத்கர் இன்றும் நாளையும்’ என்ற பெயரில் அம்பேத்கர் குறித்த ஆவணப் படமொன்றை தயாரிக்கவுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். ‘காலா’ படத்தைத் தொடர்ந்து, இந்தி படமொன்றை இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பா.இரஞ்சித். மேலும், ‘பரியேறும் பெருமாள்’ படத் தயாரிப்பைத் தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பி.ஆர்.அம்ப்தேகர் இன்றும் நாளையும்’ என்ற ஆவணப்படத்தை தயாரிக்கவுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். இதனை ஆவணப் பட இயக்குநர் ...

Read More »

பேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு!

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘பேய் மாமா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிலகாலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு ...

Read More »