திரைமுரசு

கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை!

சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:- தஞ்சை ...

Read More »

கிராமத்து பெண் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் ராஷ்மிகா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, தனது அடுத்த படத்திற்காக பயிற்சி எடுத்து வருகிறாராம். நடிகர் அல்லுஅர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். அவருக்கு கிராமத்து பெண் வேடம். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து ...

Read More »

முன்னணி நடிகர்களால் ஓரங்கட்டப்பட்டேன் – வித்யா பாலன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் முன்னணி நடிகர்களால் ஓரங்கட்டப்பட்டேன் என்று பேட்டியளித்துள்ளார். பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான் நடித்த பரினீதா என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பா, மிஷன் மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், கோபத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த வித்யாபாலன், மலையாள ...

Read More »

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்த அஜித்

விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் அஜித். எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். படத்தில் ஹீமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குக்கு முன் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்றது. ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அஜித் சென்னை செல்வதற்கு விமான டிக்கெட்டுகள் தயாராக இருந்துள்ளது. ஆனால், தனது உதவியாளரிடம் கூறி விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஐதரபாத்தில் இருந்து ...

Read More »

இசை நிகழ்ச்சி மூலம் ரூ.980 கோடி கொரோனா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி

பிரபல பாப் பாடகி லேடி காகா, கொரோனா நிவாரணத்துக்காக ஆன்லைனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரூ.980 கோடி நிதி திரட்டியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளன. இதனால் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தி கொரோனா ...

Read More »

மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-  கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே ...

Read More »

கணவரின் புகைப்படங்களை நீக்கியது ஏன்?

நடிகை சுவாதி தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம் பெற்ற “கண்கள் இரண்டால்.. உன் கண்கள் இரண்டால்… என்னை கட்டி இழுத்தாய்” பாடல் காட்சியில் அவர் நிஜமாகவே கட்டி இழுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்த சுவாதி 2018-ல் ...

Read More »

ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களையும் சைந்தவி பாடியிருக்கிறார். இந்நிலையில் ஜி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Read More »

‘டாம் அண்ட் ஜெர்ரி’ இயக்குனர் காலமானார்

உலகப்புகழ் பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி எனும் கார்ட்டூன் தொடரை இயக்கிய ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடர், வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் ...

Read More »

மகள்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா

சமீபத்தில் சமூக வலைதளத்தில் இணைந்த நடிகை நதியா, முதன்முறையாக தனது மகள்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ...

Read More »