முன்னணி நடிகர்களால் ஓரங்கட்டப்பட்டேன் – வித்யா பாலன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் முன்னணி நடிகர்களால் ஓரங்கட்டப்பட்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான் நடித்த பரினீதா என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பா, மிஷன் மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், கோபத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த வித்யாபாலன், மலையாள என்.டி.ஆர். பயோபிக்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார்.
பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். சல்மான் கான் , அக்ஷய் குமார் படங்களில் வித்யா நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் கேட்டபோது முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க வைக்க, என்னை யாரும் யோசிக்கவில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். அவர்களால் ஓரங்கட்டப்படுவதாக, நிராகரிக்கப்படுவதாக நினைத்தேன். ஆனால், அதற்காக வருத்தப்படவில்லை. நான் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க முடிவு செய்தேன். சினிமாவுக்கு அதுதான் ஆத்மா. அதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன். அந்தப் படங்கள் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன என்று கூறியுள்ளார்.