திரைமுரசு

வைரலாகும் ஜெயம் ரவியின் பூமி!

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படம் ‘பூமி’. ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமத்துள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு 25-வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ...

Read More »

புதிய அவதாரம் எடுக்கும் அனுஷ்கா சர்மா

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார். பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடிப்பதுடன், அதை தயாரிக்கவும் செய்கிறார். ‘உங்கள் நடிப்புக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் தான், நீங்களே படம் தயாரித்து, ...

Read More »

விஜய்சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், படங்கள் நடிப்பதில் விஜய்சேதுபதியை மிஞ்சியுள்ளார். தொலைக்காட்சியில் இருந்து மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சந்தானம் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து படங்களுமே வியாபார ரீதியாக நல்ல வசூல் பார்த்தன. ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் ...

Read More »

பொன்னியின் செல்வனில் வில்லனாக விக்ரம் பிரபு?!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். ...

Read More »

மகளிர் தின விழாவில் நயன்தாரா!

மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடைபயண பேரணி நடந்தது. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு பேரணி தொடங்கியது. பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி எத்திராஜ் சாலை, கல்லூரி சாலை, ஹாடேவ்ஸ் சாலை, ஆயகர் பவன் ...

Read More »

மீண்டும் தள்ளிப்போகும் பொன் மாணிக்கவேல்!

ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன் மாணிக்கவேல் படத்தின் வெளியான திகதி மாற்றப்பட்டுள்ளது. பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக காவல் துறையினர்  நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த ...

Read More »

‘எட்டுத்திக்கும் பற’ ஆணவக் கொலைக்கு எதிரான படம் – இயக்குனர் கீரா

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ ஆணவக் கொலைக்கு எதிரான படம் என அப்படத்தின் இயக்குனர் கீரா தெரிவித்துள்ளார். கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “எட்டுத்திக்கும் பற”. வர்ணாலயா சினி கிரியேசன், வி5 மீடியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கீரா கூறியதாவது: “எட்டுத்திக்கும் பற” சாதி வெறிக்கு ...

Read More »

அருவா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்?

ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் அருவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே., காப்பான் படங்கள் வந்தன. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஹரி இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்துக்கு அருவா என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஆறு, ...

Read More »

பாரதியாருடன் கொரோனாவை ஒப்பிட்டு குட்டிக் கதை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுடன் பாரதியாரை ஒப்பிட்டு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் டுவிட் செய்துள்ளார். இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்காக இவர் எழுதிய குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. Arunraja Kamaraj ✔@Arunrajakamaraj சாதிகள் இல்லையடி பாப்பா #எல்லாசாதியையும்சமமாகபார்க்கும் #மகாகவிகொரோனா#CoronaAlert 3,543 முற்பகல் 10:31 – 4 மார்., 2020 Twitter ...

Read More »

கொரோனாவால் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம்!

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் வெளியாகும் திகதியில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக ‘நோ டைம் டூ ...

Read More »