திரைமுரசு

கண்ணே கலைமானே பார்த்து சாமியாட்டம் ஆடிய பெண்கள்!

உதயநிதியின் கண்ணே கலைமானே வெளியாகி இருக்கும் திரையரங்கில் சில பெண்கள் சாமியாட்டம் ஆடியிருக்கிறார்கள். சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் மதுரை, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள திரையரங்கில் கண்ணே கலைமானே திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது சில பெண்கள் திரையில் வரும் காட்சியை கண்டு சாமியாட்டம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை ...

Read More »

கண்ணே கலைமானே! -விமர்சனம்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை தமன்னா இயக்குனர் சீனு ராமசாமி இசை யுவன் ஷங்கர் ராஜா ஓளிப்பதிவு ஜலேந்தர் வாசன் அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்யும் முனைப்பில் இருக்கிறார். அதேபோல் கஷ்டப்படும் தனது ஊர் மக்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்து, அவர்களால் அதை அடைக்க முடியாவிட்டால் தானே முன்வந்து அதனை அடைக்கிறார். இந்த நிலையில், அந்த ஊரிருக்கு வங்கி அதிகாரியாக வரும் ...

Read More »

‘எனக்கும் கிராமத்து வாழ்க்கை நல்லா தெரியும்!-உதயநிதி ஸ்டாலின்

அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தை விளம்பரப்படுத்தும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அடுத்த கட்ட அரசியல் பிரச்சாரத்துக்குத் தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியதில் இருந்து தொடங்குகிறது வெளிச்ச உரையாடல். ‘கண்ணே கலைமானே’ படத்தின் மூலம் என்ன சொல்லியுள்ளீர்கள்? இது அழுத்தமான கிராமத்து கதை. அழகான அன்பை, குடும்ப உறவு களின் உன்னதத்தை சொல்லும். கமலக் கண்ணன் என்ற விவசாயியாக, மண் புழு உற்பத்தி செய்பவராக வருகிறேன். நிஜத்தில் நான் ...

Read More »

16 வருடங்களில் 793 படங்களுக்கு தடை விதித்த தணிக்கைக் குழு!

16 ஆண்டுகளில் மட்டும் 793 திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடைசெய்துள்ளதாக தகவல் உரிமை சட்ட தகவல் மூலம் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட இந்தியப் படங்களில், 231 இந்திப்படங்களும், 96 தமிழ்ப் படங்களும், 56 தெலுங்கு படங்களும், 36 கன்னடப் படங்களும், 23 ...

Read More »

மனைவியே மந்திரி: விழுதாகத் தாங்குபவர்! – ஆர்ஜே பாலாஜி

நானும் என் மனைவி திவ்யா நாகராஜனும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். படிப்பு முடிய சில மாதங்கள் இருக்கும்போதுதான், ‘இது நட்பு இல்லையோ?’ என்று தோன்றியது. படிக்கும்போதே திருமணம் கல்லூரி நாட்களில் ஜாலியாக இருப்பேன். என்னைப் பற்றி அவரது வீட்டில் விசாரித்தபோது, யாருமே நல்லவிதமாகச் சொல்லவில்லை. எங்கள் விஷயத்தை அவர் தன் வீட்டில் சொன்னதிலிருந்து ஒரு வருடத்துக்கு எங்கேயுமே அனுப்பவில்லை, போனையும் வாங்கிவைத்துக்கொண்டார்கள். அவர் ரொம்ப வைராக்கியத்துடன் இருந்தார். அவரைப் பார்க்க முடியாத தவிப்பு எனக்கு. சென்னையில் இருக்க வேண்டாம் என்று கோயம்புத்தூருக்கு மேற்படிப்புக்குச் ...

Read More »

மனைவியே மந்திரி: தோழியே மனைவி! – நடிகர் பிரசன்னா

சினிமா துறையில் இருந்து காதலித்து இணைந்த நானும் சினேகாவும் திருமணத்துக்கு முன்பே இரண்டு குடும்பங்களின் பிரச்சினைகளையும் பேசி முடித்துவிட்டோம். இருந்தாலும் பல குடும்பங்களில் இருப்பதுபோல் உரசல்கள், நெருடல்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றையெல்லாம் எனக்காகப் பொறுத்துக்கொண்டு தேவைப்படும்போது விட்டுக்கொடுக்கத் தயங்கியதே இல்லை அவர். சமீபத்தில் என் அப்பா, “நாங்களே உனக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்துவைத்திருந்தால்கூட, உன் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பாரான்னு தெரியாது. சந்தோஷமா இருக்கு” என்றார். அந்த அளவுக்குக் குடும்பத்தையும் என்னையும் சினேகா பார்த்துக்கொள்கிறார். அம்மா என்பதில் ஆனந்தம் மகன் ...

Read More »

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்!

அயோக்யா படப்பிடிப்பில் முக்கியமான காட்சிக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்துள்ளார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று ...

Read More »

நாம் புலிகளாக இருந்தோம்! – இயக்குநர் செழியன்

இது உலக சினிமாக்களை வியந்து கொண்டாடும் தலைமுறை யின் காலம். இப்போது தமிழ் சினிமா ஒன்றை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டுலெட்’. உலக அளவில் 100 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 84-ல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட படம். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உட்பட, மொத்தம் 32 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் முதல் தமிழ் சினிமா. உலகம் சுற்றித் திரும்பியிருக்கும் ‘டுலெட்’ பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ...

Read More »

சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ...

Read More »

விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய காவல் துறை!

விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய காவல் துறை, ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது. டெர்பி காவல் துறை  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் ...

Read More »