அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவிற்கான புதிய 4 விசாக்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. •    Subclass 400 Temporary Work (Short Stay Specialist) visa •    Subclass 403 Temporary Work (International Relations) visa •    Subclass 407 Training visa •    Subclass 408 Temporary Activity visa ஆகிய புதிய பிரிவுகளை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் இப்பரிந்துரைக்கு Governor-General அனுமதி வழங்கும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடை உள்ள பெண்

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடையுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த இளம்பெண் ஒருவர் தீவிர முயற்சியால் தற்போது 75 கிலோ எடையுள்ள அழகு பெண்ணாக மாறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். விக்டோரியா நகரில் நடாலி புர்டினா என்ற 23 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் திருமணம் ஆனதை தொடர்ந்து 20-வது வயதில் கர்ப்பம் அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை பிறந்தது முதல் அவரது உடல் எடை கூடிக்கொண்டு சென்றுள்ளது. நடாலி குளிர்பானங்கள் மற்றும் கிடைத்த ...

Read More »

அவுஸ்­­ரே­லி­யா­வில் தசரா கொண்டாட்­டங்கள் களை கட்­டி­ன

அவுஸ்­­ரே­லி­யா­வின் ஆகப்­பெ­ரிய இந்துக் கோயிலாக அமைந்­துள்­ளது ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயம் 22 ஏக்கர் பரப்­ப­ள­வில் 4.5 மி. அவுஸ்­­ரே­லி­ய டாலர் செலவில் மெல் போர்னில் அமைந்­துள்ள அந்தக்­ கோ­யிலில் 5 டன் எடை­யுள்ள துர்க்கா தேவி சிலையும் வேறு பல இந்துக் கட­வு­ளர்­களின் சிலைகளும் உள்ளன. அவுஸ்­­ரே­லி­யா­வில் இருக்­ கும் 430,000 இந்­தி­யர்­கள் அந்­நாட்­டின் மக்கள் தொகையில் 1.8 விழுக்­காடாகும். அக்கோயிலில் தசரா கொண்டாட்­டங்கள் களை கட்­டி­ன.

Read More »

தென் சீனக் கடல் விவகாரம் முறையாக கையாளப்படாவிட்டால் ஆபத்து

சீன தலைநகர் பீஜிங்கில் 7-வது ஜியாங்ஷன் பிராந்திய பாதுகாப்பு மன்ற கூட்டம் இன்று (11) நடைபெற்றது. புதுவகையான சர்வதேச உறவுகளை உருவாக்குவது கூட்டத்தின் மையமான கருத்தாக இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்ரேலிய முன்னாள் பிரதமர், “தென் சீனக் கடல் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றால் அமெரிக்கா-சீனா இடையே சிக்கலாக மாறும். இந்த பிரச்சனைகள் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது” என்றார்.

Read More »

அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்களின் ஆய்வு

‘மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே ‘அளவோடு தண்ணீர் குடித்து வளமோடு வாழுங்கள்’ என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பில் வௌிவந்த உண்மை?

கிரிக்கட் பந்து தலையை தாக்கியதில் உயிரிழந்த அவுஸ்திரேலிய அணி வீரர்பி லிப் ஹியூஸின் மரணத்தை தடுத்திருக்க முடியாது என நீண்ட விசாரணைகளின் பின்னர் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் மரணம் தொடர்பில் 5 நாள் ஜூரி குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் , இதன் போது பந்து தலையை தாக்கிய நொடி முதல்பி லிப் ஹியூஸின் மரணத்திற்கான செயன்முறை ஆரம்பித்து விட்டதாக தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி சிட்னி நகரில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் போது பந்து தலையை தாக்கிய நிலையில் , மருத்துவமனையில் ...

Read More »

புகலிடம் கோருவோர் அறிந்திருக்க வேண்டியவை

தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறையில் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் பற்றிய விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்விhttp://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/trrkaalik-paatukaappu-viicaa-kurrittu-puklittm-kooruvoor-arrintirukk-veennttiyvai?language=ta  

Read More »

அவுஸ்ரேலியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு

புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை கையாள்வது எப்படி? தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்க்கு தமிழ் சட்ட வல்லுனரான அவனிதா செல்வராஜா கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ் ஏதிலிகள் கழகத்தின் குமார் நாராயணசாமியும் பங்குபற்றுகிறார். தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தக் கருத்தமர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலம்: 4PM Saturday ...

Read More »

கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதம் அடித்துள்ளார்

நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இதை தொடர்ந்து வீராட்கோலி டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்றார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 48-வது டெஸ்டில் ...

Read More »

SBS தேசிய மொழிப் போட்டியில் இரு தமிழ் மாணவர்கள் வெற்றி

SBS வானொலி ஆஸ்திரேலியா முழுவதும் நடத்திய மொழிப் போட்டியில் சுமார் 700 பள்ளிக்கூடங்களிலிருந்து 4 வயது முதல் 18 வயதுவரை என்று மொத்தம் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றியாளர்கள் ஆறு பேரில் மெல்பன் நகரில் வாழும் வைகா கார்த்திக் மற்றும் கதிர் ஜானகி சக்திவேல் என்று இரு தமிழ் குழந்தைகள் வெற்றிபெற்றனர். இவர்களுக்கு நேற்று(8) சிட்னி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Read More »