குமரன்

பன்னாட்டுப் பொறுப்புக் கூறல் அமைப்பை இலங்கையில் ஐ.நா. நிறுவவேண்டும்

“இலங்கை அரசாங்கம் அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் (பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை

ஜெனீவாவில் நிஷா பீரிஸ் குற்றச்சாட்டு “நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ...

Read More »

பிக்பாஸ் முகினின் முதல் படம் ‘வெற்றி’

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலேசியாவை சேர்ந்த முகின் ராவ், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த சீசனின் வெற்றியாளரும் இவர்தான். இவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை ...

Read More »

நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது

நியூசிலாந்து நாட்டில் வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கி இருந்தபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அங்கு தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது. அங்கு பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1,477 என உலக சுகாதார நிறுவனம் ...

Read More »

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஓவியா, தனது ரசிகை ஒருவர் மரணத்திற்கு துடி துடித்து போயிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார். ...

Read More »

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்ற ஆறு பேருக்கு நீதிமன்றில் வழக்கு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டு. தலைமையக காவல் துறை வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், ...

Read More »

வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு படையினர் அச்சுறுத்தல்

வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளரை பின்தொடர்ந்த இராணுவத்தினர் காணொளி எடுத்துள்ளதுடன் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர். தமிழ்கட்சிகளின் அழைப்பினை ஏற்று வடக்குகிழக்கில்முழுகதவடைப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அச்சுவேலி பகுதியில் படையினரும் புலனாய்வாளர்களும் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வலிகிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோசினை அச்சுறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டுள்ளனர். நானும் உபதவிசாளரும் அப்பகுதியில் கடை உரிமையாளர்களிடம் பேசியபோது அவர்கள் தங்கள் கடைகளை திறக்குமாறு படையினரும் காவல் துறையினரும் புலனாய்வாளர்களும் அச்சுறுத்தினர் என தெரிவித்தனர் என நிரோஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் பஜிரோ ரகவாகனத்தில் வந்த ...

Read More »

அச்சாப்பிள்ளை அரசியல் தான் நடக்கின்றதா?

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் ...

Read More »

தாயகத்தில் ஹர்த்தால்- யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு !

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “அரசினதும் அதன் படைகளின தும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப் படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்க மாட்டார்கள். தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபட ...

Read More »

எஸ்.பி.பி.க்கு ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்க வேண்டும் – விவேக்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார். 72 படங்களில் நடித்து இருக்கிறார். ...

Read More »