குமரன்

முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் ...

Read More »

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக தலைவராக இந்தியப் பெண் நியமனம்

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 1986-ம் ஆண்டு தனது மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்தார். தற்போது, கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாநில அறங்காவலர் ...

Read More »

கொவிட்- 19 தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்க தீர்மானம்

பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி எதிர்காலத்தில் பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றளிக்கும் அட்டையை வைத்திருப்பதைக் கட்டாயமாக்குவதில் கொவிட்-19 தடுப்பு பணிக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

Read More »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீப்பந்தம் ஏந்தி வவுனியாவில் பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்து நிறைவுற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்இ நீதி கிடைக்கும்வரை போரோடுவோம்இ நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன்இ பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ...

Read More »

செ.கணேசலிங்கன்: ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி

ஈழத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக நாவல் உலகில் புதிய பாதையை வகுத்த முன்னோடியான செ.கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021) மறைந்தார். அவருக்கு வயது 93. இலங்கையின் ’தினகரன்’ நாளிதழில் 1950-ல் தனது முதல் சிறுகதையை எழுதிய அவர், தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் சமூக அவலங்களைத் தனது எழுத்துகளின் மூலம் பல்வேறு பரிமாணங்களில் தோலுரித்துக் காட்டியிருந்தார். யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தில் 1928 மார்ச்-9 அன்று பிறந்த செ.கணேசலிங்கன் அரசுப் பணியாற்றி 1981-ல் ஓய்வு பெற்றார். 1950-களில் தொடங்கி, மறையும் வரை தொடர்ந்து எழுத்துப் பணியில் ...

Read More »

ஆஸ்திரேலியா: ‘அகதிகள்’ எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 75 அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் அகதிகள் நல செயல்பாட்டாளர் ஐன் ரிண்டோல். “ஒருவரை விடுதலைச் செய்யும் பொழுது தடுப்பில் உள்ள அகதிகள் மோசமாக உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களும் எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான அமின் அப்ரவி.

Read More »

நியூசிலாந்தில் 2027 முதல் சிகரெட் விற்பனையில் புதிய கட்டுப்பாடு

நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல், சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.</strong></p> 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027-ல் 14 வயதை எட்டும் அனைவருக்கும், நிரந்தரமாக சிகரெட் விற்க தடை விதிக்கப்பட உள்ளது. இதன், மூலம் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும், என அந்நாட்டு சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆயிஷா வெரால் கருத்து தெரிவித்தார்

Read More »

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் 6 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்’ ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ’ ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு ...

Read More »

கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி இந்த வருடம் இந்திய தளபதி ஹெலிக்கொப்டர் விபத்துக்களில் பலி – பிரபல ஆய்வாளர் தெரிவிப்பது என்ன?

இந்திய முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி ஹெலிக்கொப்டர் விபத்தில் பலியானதையும் ஒப்பிட்டு டுவிட்டரில் கருத்துக்கள்வெளியாகின்றன. லடாக்கில் காணப்படும் நிலை காரணமாக இந்த ஹெலிக்கொப்டர் விபத்தி;ன் பின்னணியில் சீனா இருக்கலாம் என தெரிவித்துள்ள டுவிட்டர் பயனாளர்கள் தாய்வானில் கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி சென் யி மிங்கும் பல முக்கிய இராணுவதளபதிகளும் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் தாய்பேயிற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அவர்கள் கொல்லப்பட்டனர். சென் தாய்வான் இராணுவத்தின் சிரேஸ்ட ...

Read More »

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண சபையின் ஆளுநர் ராஜா கொலுரே மரணமடைந்ததை அடுத்த ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »