கொவிட்- 19 தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்க தீர்மானம்

பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

அதன்படி எதிர்காலத்தில் பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றளிக்கும் அட்டையை வைத்திருப்பதைக் கட்டாயமாக்குவதில் கொவிட்-19 தடுப்பு பணிக்குழு கவனம் செலுத்தியுள்ளது.