ஆஸ்திரேலியா: ‘அகதிகள்’ எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 75 அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் அகதிகள் நல செயல்பாட்டாளர் ஐன் ரிண்டோல்.
“ஒருவரை விடுதலைச் செய்யும் பொழுது தடுப்பில் உள்ள அகதிகள் மோசமாக உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களும் எந்த காரணமுமின்றி விளக்கமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான அமின் அப்ரவி.