குமரன்

கைரேகை கீ போர்ட்

மைக்ரோசாஃப்ட் கைரேகையை ரகசிய குறியீடாகக் கொண்ட கீ போர்டை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் தனிநபர் கணினிக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். கணினியை இயக்க மட்டுமல்ல, இணையதளங்களின் ரகசிய குறியீடாகவும், பண பரிமாற்றங்களுக்கும் கைரேகையை பயன்படுத்த முடியும். இந்த கீ போர்டில் கை ரேகைக்கு தனியாக கீ இருக்கும். ஒரு முறை கைரேகையை பதிவு செய்து கொண்டபிறகு இந்த பட்டனை அழுத்தினால், வழக்கமான கீ போர்டை போல இயக்க முடியாது.

Read More »

தமிழீழ மண்ணில் நம்பிக்கைக்கு உரிய ஒரு தலைவராக விக்னேஸ்வரன்!- காசி ஆனந்தன்

தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன் அவர்களை உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்கள் நன்றி உணர்வோடு பார்க்கிறார்கள், அவர்மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர முயன்ற தமிழரசுக்கட்சியை அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.என்கிறார் தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிவரும் இந்திய ஈழத்தமிழர் நட்புறவு இயக்கத்தின் தலைவர் காசி ஆனந்தன் . அண்மையில் வெளியாகி உள்ள ஓர் அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறி இருப்பதாவது , தந்தை செல்வாவின் தலைமையில் அறப்போராட்ட காலத்திலும் தலைவர் பிரபாகரன் ...

Read More »

இந்தியக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இணையமூடாக அவுஸ்ரேலியாவிற்கு விண்ணப்பம்!

எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் இந்தியக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் Online-இணையமூடாக அவுஸ்ரேலிய Visitor விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் 4 மாதங்களில் மட்டும் 65,000 இந்தியர்களுக்கு அவுஸ்ரேலியாவுக்கான Visitor Visa வழங்கப்பட்டிருப்பதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்பின்னணியில் அவுஸ்ரேலியா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் இந்நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக துணை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார். இதன்படி ImmiAccount மூலம் இணையமூடாக எந்தநேரமும் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியும் என்பதுடன், இணையமூடாக கொடுப்பனவை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் விசா விண்ணப்பத்தின் பரிசீலனை ...

Read More »

அவுஸ்ரேலிய பக்டீரியா வகையொன்று சிறிலங்காவில் அறிமுகம்!

டெங்குவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய பக்டீரியா வகையொன்று சிறிலங்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வகை பக்டீரியாவை சிறிலங்காவில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த வகை பக்டீரியாவின் ஊடாக டெங்கு நுளம்பின் விசத்தை குறைக்க முடியும் என அவர் கொழும்பு ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். வியட்னாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த பக்டீரியா வகை பரிசோதிக்கப்பட்டுள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக இந்த பக்டீரியா பயன்படுத்தப்படுவதாக அவுஸ்ரேலிய மொனொஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வகை பக்டீரியாவை சிறிலங்காவில் ...

Read More »

எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திற்காக 8 வேடங்களில் நடித்துள்ளாராம். விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க ...

Read More »

போக்கிலிகளான சிவஞானம், சுகிர்தனுக்கு கதிரைகள் பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்துகின்றேன்! சிவகரன்

போக்கிலிகளான சீ.வி.கே சிவஞானம் மற்றும் சுகிர்தன் போனறவர்களிற்கு மாகாணசபையினில் கதிரை பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்தியுள்ளார் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன். அத்துடன் சீ.வி,கே.சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி பதவி ஆசைபிடித்து திரிகின்றார். அவர் தமிழ்தேசிய அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவரல்ல என்றும் அவைத்தலைவர் பதவி ஆசைபிடித்து தானே முதல்வருக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டிய சிவகரன், தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார் மாவை எனவும் அடிப்படை கட்சி கட்டமைப்போடு இருந்த தமிழரசு கட்சியை அழித்து சின்னாபின்னமாக்கிய பெருமை மாவை சேனாதிராயாவையே சாரும் எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ...

Read More »

நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் -அர்த்தனா

நல்ல கதை, நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் என அர்த்தனா கூறியுள்ளார். சமுத்திரகனியின் ‘தொண்டன்’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர் அர்த்தனா. இது பற்றி கூறிய அவர்… “முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகி விட்டீர்களே… என்று எல்லோரும் வருத்தத்துடன் கேட்கிறார்கள். தங்கையாக நடிப்பது அவ்வளவு பெரிய தவறா? சமுத்திரகனி சார் இயக்கம், அவருடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் கதையே கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ‘தொண்டன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி சாருக்கு போன் செய்து ‘என் ...

Read More »

விண்வெளியில் எக்ஸ்ரே டெலஸ்கோப் நிறுவிய சீனா

பூமிக்கு மேல் 500 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை சீனா நிறுவியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா முன்னேறி வருகிறது. அமெரிக்காவுக்கு போட்டியாக விண்வெளியில் தனியாக ஆய்வகம் அமைத்து வருகிறது. சந்திரனுக்கு ஆள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை நிறுவியுள்ளது. 2.5 டன் எடையுள்ள இந்த டெலஸ்கோப் மார்ச்-4பி ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூகுயான் ...

Read More »

மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலியா நகரசபைத்தலைவர்!

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் டன்டினோங் நகரசபைத் தலைவரான திரு ஜிம் மெமெட்டி அவர்கள் அண்மையில்இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கை சென்றிருந்த ஜிம்அங்குள்ள சிங்களப்பேரினவாத அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள வர்த்தகர்கள் முதலானோரைச்சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்புக்களையடுத்து அவுஸ்திரேலியா திரும்பியிருந்த திரு ஜிம் இலங்கை அரசிற்கு சார்பான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இவரது இத்தகையச்செயற்பாடுகள் மெல்பேர்ணில் வதியும் ஈழத்தமிழர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஜிம் அவர்கள் எடுத்திருந்த இந்நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் ஏதிலிகள் கழகச் செயற்பாட்டாளர்கள் தமது சமூக வலையத்தளத்தில்ஜிம் ...

Read More »

அகதிகளின் அவலத்தின் அடையாளம் ஆற்றில் மிதக்கிறது!

உலகளாவிய ரீதியில் நிலவும் அகதிகள் நெருக்கடியை அடையாளப்படுத்தும் விதமாக காற்றினால் நிரப்பப்பட்ட உருவம் ஒன்று மெல்பேர்னின் Yarra ஆற்றில் மிதக்க விடப்பட்டுள்ளது. உயிர்காக்கும் அங்கி அணிந்தபடி கால்களைக் கட்டிக்கொண்டிருக்கும் அகதி ஒருவரை அடையாளப்படுத்தும் இந்த கலை வேலைப்பாடு, Belgian artist collective-இன் Schellekens , Peleman ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த வேலைப்பாடு, தற்போது ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாதம் 19 – 25ம் திகதி வரை அகதிகள் வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இதையொட்டி குறித்த ...

Read More »