அகதிகளின் அவலத்தின் அடையாளம் ஆற்றில் மிதக்கிறது!

உலகளாவிய ரீதியில் நிலவும் அகதிகள் நெருக்கடியை அடையாளப்படுத்தும் விதமாக காற்றினால் நிரப்பப்பட்ட உருவம் ஒன்று மெல்பேர்னின் Yarra ஆற்றில் மிதக்க விடப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் அங்கி அணிந்தபடி கால்களைக் கட்டிக்கொண்டிருக்கும் அகதி ஒருவரை அடையாளப்படுத்தும் இந்த கலை வேலைப்பாடு, Belgian artist collective-இன் Schellekens , Peleman ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த வேலைப்பாடு, தற்போது ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இம்மாதம் 19 – 25ம் திகதி வரை அகதிகள் வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இதையொட்டி குறித்த கலை வேலைப்பாடு Immigration Museum-இல் நிறுவப்படவுள்ளது.