குமரன்

கீத்நொயர் தாக்கப்பட்டமை தொடர்பாக மகிந்தாவிடம் விசாரணை!

ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தினை பெறவுள்ளனர். சபாநாயகர் கருஜெயசூர்ய கீத்நொயர் விவகாரம் குறித்து வழங்கியுள்ள வாக்குமூலத்தை தொடர்ந்து சில சந்தேகங்களிற்கு தீர்வை காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலத்தை பெறவேண்டியுள்ளது என காவல் துறை  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வாக்குமூலத்தை பெறுவதற்கு உகந்த திகதியை தெரிவிக்குமாறு காவல் துறை மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கீத்நொயர் கடத்தப்பட்டது தெரியவந்ததும் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக அவரை உயிருடன் மீட்க ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கார் வைத்திருப்பவர்களுக்கு!

வாகன விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது அவசியம். வாகனத்திலுள்ள சில lights விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும். கார்களின் முன்-பின் புறம் இருக்க கூடிய fog light களை மூடுபனி மற்றும் மழையான காலநிலை தருணத்தில் வாகன சாரதிகள் சரியாக பார்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைத் தவிர்த்து பயன்படுத்தும் தருணங்களில் அபராதம் கட்ட நேரிடும். எவ்வளவு அபராத தொகை கட்டவேண்டும் தெரியுமா? இதோ அபராத தொகை நியூ சவுத் வேல்ஸ்- 110 டொலர்கள்- 2 demerit points விக்டோரியா- ...

Read More »

360 டிகிரி கமரா!

எமது விருப்பத்துக்கு ஏற்ப 360 டிகிரியிலோ அல்லது 180 டிகிரியிலோ படங்கள், காணொளிகளை எடுக்க உதவும் சிறிய கமரா. நேரடியாக ஸ்ட்ரீம் செய்யும் வசதி, படம் எடுத்தபின் ஃபோகஸ் செய்யும் வசதி உடையது. க்யூஓ கேம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Read More »

வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ட்ரம்ப் சம்மதித்ததார்!

வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார். இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது. ...

Read More »

தவராசா கேட்ட 7000 ரூபா!

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுதினத்திற்கு வழங்கிய பணத்தை திரும்பிக் கேட்டதற்கமைய வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஒருவரிடம் ஒரு ரூபா வீதம் சேகரித்து  சபைக்கு அனுப்பிவைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தலைவர் ச.டினேஸ்காந்த் மற்றும்  மாணவர் ஒன்றிய உப தலைவர் சி.ஹயூரன் தெரிவிக்கையில்மே18 முள்ளிவாய்கால் நினைவு தினம் வடமாகாண சபை, யாழ் பல்கலைக்கழகம் மற்றும் பொது அமைப்புக்களினாலும் அவ் நினைவேந்தல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. ...

Read More »

மருதங்கேணி பிரதேசசெயலகத்தை முடக்கி முற்றுகைப்போராட்டம்!

தென்னிலங்கை மீனவர்களை விரட்ட நீரியல்வள அமைச்சருடன் பேசச்சென்ற சுமந்திரனின் நிலை தெரியாதுள்ள நிலையில் மீனவ அமைப்புக்கள் மருதங்கேணி பிரதேசசெயலகத்தை முடக்கி போராட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடில்களை அமைத்து தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள். முறையற்ற வகையில் கடல் அட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களினை தட்டி கேக்கும் உள்ளூர் மீனவர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே பிரதேச செயலக முற்றுகை போராட்டத்தை தாண்டியும் கடலட்டை பிடிப்பது தொடர்ந்தால், கடலட்டைக்கு ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்த ஜேம்ஸ் சதர்லெண்ட் 2001-ம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்து வந்தார். இது தொடர்பாக சதர்லெண்ட் கூறியதாவது:- 20 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். ...

Read More »

பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர்!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் தன் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர். நீட் தேர்வில் கிடைத்த வெறும் 39 மதிப்பெண்கள், அவரை நிலைகுலையச் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளடங்கி அமைந்திருக்கிறது பெருவளூர் ஊராட்சி. சுமார் 10,000 மக்கள் தொகையைக் கொண்ட சற்று பெரிய ஊர். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல ஊரும் காலனியும் தனித்தனியே இருக்கும் இந்த ஊரில் ஒரு எளிய ஆதிதிராவிட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரதீபா. கடந்த ஜூன் ...

Read More »

“அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…”! -இயக்குநர் பா.இரஞ்சித்

நீட் தேர்வில் தோல்வியடைந்த பிரதீபா தற்கொலை குறித்து, ‘அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் 39 மதிப்பெண்களே எடுத்து தோல்வியடைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஏழை விவசாயியின் மகளான இவர், கடந்த வருடமும் நீட் தேர்வு எழுதி 155 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், இந்த மதிப்பெண்ணுக்கே பல லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் படிக்க முடியும் என்பதால், இந்த வருடமும் ...

Read More »

கிம்-டிரம்ப் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு பணியில் கூர்க்கா வீரர்கள்!

சிங்கப்பூரில் வருகிற 12-ந்திகதி அமெரிக்கா – வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் பாதுகாப்பு பணியை தீவிரமாக கண்காணிக்கும் கூர்க்கா வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளளனர். இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நாடு முழுவதும் சென்று காவலாளி பணிகளையே செய்வது வழக்கம். மேலும் இந்திய ராணுவத்திலும் கூர்க்கா படை என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது. அவர்கள் காவல் பணிகளில் மிகவும் திறமையாக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை செய்ய வைக்கின்றனர். ...

Read More »