குமரன்

“எனக்கு அப்பாவும் இல்லை…. அவர் போட்ட கடிதமும் இல்லை” !

வகுப்பறைக்குச் சென்றவுடனேயே சில மாணவர்களைத் தேடுவதுண்டு. அந்த மாணவர்கள் கல்வியில் ஆகக் குறைந்த நிலையிலும் ஏரத்தாழ 50 வீதத்தை தொடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முழுமையாக எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர். இந்த மாணவர்களின் இயல்புகளாலும் கல்வி நிலையினாலும் வகுப்பறைக்குச் சென்றதும் முதலில் இவர்களை தேடுவது வழக்கமாக கொண்டிருப்பேன். அப்படித்தான் அன்றைக்கு அந்த மாணவியை விசாரித்தேன். “அவள் பிறசர் கிளினிக்குக்கு போயிட்டாள் சேர்” என்றாள் இன்னொரு மாணவி. நான் அதிர்ந்தே போய்விட்டேன். அவளின் அழுத்தம் நிறைந்த பேச்சும் பார்வையும் திடீர் திடீர் என கலங்கும் கண்களும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு! குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலி!

அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது, மேற்கு அஸ்திரேலியாவின் Margaret River, Osmington பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் மற்றும் 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார் 7 பேரின் உடல்களையும் இரு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தாக்குதல் நடாத்தியவர்களை பொலிசார் தேடி ...

Read More »

தமிழர்களின் உரிமைகளை எவரும் புதைக்க முடியாது!

தமிழர்களின் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை எவரும் புதைக்க முடியாது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரிக்கப்படாத நாட்டுக்குள், தமிழ் மக்களும் சமமான பிரஜைகளாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். தடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கு,கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரை குறித்து நேற்று நடைபெற்ற சபை ...

Read More »

நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட மேல்  நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக ...

Read More »

சட்ட உதவியுடன் உயிர் துறந்த விஞ்ஞானி!

ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கௌரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104). முதுமைக்காலத்தில் இருந்த இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்தது. எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் ...

Read More »

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை!

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள்! -கண்ணீர் விட்டழுத பசீர் காக்கா

முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா. இது தொடர்பாக காக்கா அண்ணா உள்ளிட்டவர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் அங்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர்கள் தெரிவித்ததாவது, தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு) , முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் திருமலை) ஆகிய நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சுழலில் எமக்கான கடமையைச் ...

Read More »

இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும் நிலத்துக்கான போராட்டமும்!

 பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும். போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து 1992ஆம் ஆண்டில், முழங்காவிலுக்கு அருகில் காணப்படும் இரணைமாதா நகருக்குச் சென்று, இறுதியில் அங்கு, தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். ...

Read More »

522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கமாம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு சிறிலங்கா  இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்பட உள்ளது. அவற்றை ஸ்தாபிப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாயை சிறிலங்கா  இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் ...

Read More »

புதிதாக குடியேறியவர்கள் அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

அவுஸ்திரேலியாவின் 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison 08 ஆம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையின் deficit- துண்டுவிழும் தொகை அல்லது பற்றாக்குறை 18.2 பில்லியன் டொலர்களாக உள்ளது. மேலும் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2.2 பில்லியன் டொலர்கள் surplus எனப்படும் உபரிநிதியுடன்கூடிய நிதிநிலை அறிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையினால் பாதிக்கப்படும் தொகுதியினராக புதிதாக குடியேறியவர்களும் அகதிகளும் காணப்படுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச ...

Read More »