அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு! குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலி!

அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது, மேற்கு அஸ்திரேலியாவின் Margaret River, Osmington பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் மற்றும் 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார் 7 பேரின் உடல்களையும் இரு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தாக்குதல் நடாத்தியவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவென கூறப்பட்டுள்ளது.

skynews-australia-perth-shooting_4306380

download (17)