குமரன்

இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா… காரணம் தெரியுமா?

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூலை 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை ...

Read More »

பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவி

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இது தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

நன்றி மறக்கும் அரசியல்!…..

1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு 2001ல் புதுவாழ்வு வழங்கினர் விடுதலைப் புலிகள். இவைகளுக்குக் கிடைத்த பிரதியுபகாரம்…… இலங்கைத் தீவின் அரசியல் பாதை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம் என இரண்டாகத் தனித்தனி வழியில் நீள்கிறது. சிங்களத் தேசியம் என்பது பௌத்தமும் இணைந்ததாக, கட்சிகளின் வேறுபாடுகளுக்குள்ளும் வளர்ச்சி பெற்றே செல்கிறது. ஆனால், தமிழ்த் தேசியம் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் மாட்டு வால் ...

Read More »

நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி நட்ராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கிறார். ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ...

Read More »

தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள்

இலங்கையிலுள்ள இலவச கல்வி முறைமையை இல்லாதொழித்து, தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாலபே சைட்டம் விவகாரத்தில் எம்மிடம் தோல்வியடைந்து ; வீட்டுக்கு சென்றது போலவே, கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைப் போலவே இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ; தெரிவித்தார். கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட செயற்பாடுகளின்போது ; மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குறித்த சட்ட ...

Read More »

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு ; புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்ப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினத்திலிருந்து (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வரும்வகையில் அவற்றை மேலும் தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியநிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் ...

Read More »

குணநலன் அடிப்படையில் விசா ரத்து, காலவரையற்ற தடுப்புக்காவல்

ஆஸ்திரேலியாவில் குணநலன் அடிப்படையில் விசா ரத்து செய்யப்படுபவர்கள் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதாகவும் இந்த முறையை தடுப்பதற்கான போதிய பாதுகாப்புகள் இல்லை என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையாளர் Rosalind Croucher எச்சரிக்கை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பில் உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்திருக்கிறார். புலம்பெயர்வு சட்ட விதி 501-ன் கீழ் குணநலன் அடிப்படையில் அல்லது குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது தவறான செய்கைகளில் ஈடுபடும் குழுவில் உள்ளவராக ...

Read More »

ஜேர்மனியில் மழை வெள்ளம் காரணமாக 88 பேர் பலி

பேரழிவை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளம் காரணமாக ஜேர்மனியில் 88 பேர் பலியாகியுள்ள அதேவேளை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் காணாமல்போயுள்ள 1300 பேரை தேடிவருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர். 50 முதல் 60 பேர் காணாமல்போயுள்ளனர் என கருதுகின்றோம் அவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என்றால் உயிரிழந்துள்ளனர் என்பதே அர்த்தம் என இன் அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் ...

Read More »

பசில் வருகையின் அவசரம் என்ன ?

ஆளும் பொதுஜன பெரமுனயின் சிற்பி என வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சரும் ஆகியுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நிதியமைச்சருக்கான சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி மாளிகையில் எடுத்த பின்பே பாராளுமன்றத்தின் சபாநாயகர் முன்பு பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தார். திடீரென இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிவந்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது மேற்படி திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் இலங்கையின் தேர்தல்களில் ...

Read More »

அசோக் செல்வன் – அபிஹாசன் இணையும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில ...

Read More »