தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள்

இலங்கையிலுள்ள இலவச கல்வி முறைமையை இல்லாதொழித்து, தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாலபே சைட்டம் விவகாரத்தில் எம்மிடம் தோல்வியடைந்து ; வீட்டுக்கு சென்றது போலவே, கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைப் போலவே இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ; தெரிவித்தார்.

கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட செயற்பாடுகளின்போது ; மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பொன்றை நேற்று வியாழக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ; ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பில் அமைந்துள்ள சீ.எம்.யூ. மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ; இந்த ஊடக சந்திப்புக்கு ;தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், மாணவர் அமைப்புக்கள் , பல்கலைக்கழக சங்கங்கள் என பலதரப்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டிருந்தன.