குமரன்

விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு!

இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அதை அவர் ஓரளவுக்கு வெளிப்படுத்தவும் செய்தார். எனினும், எந்தவொரு கட்டத்திலும் ...

Read More »

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை!

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது. ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் ...

Read More »

அரை நிமிடத்தில் பல் துலக்க முடியுமா?

சுத்தமாக பற்களை துலக்க, 3 நிமிடங்களாவது தேவை. ஆனால், 30 வினாடிகளில் பற்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறது, ‘சீஸ்’ (Chiiz) நிறுவனம். இது வடிவமைத்துள்ள சீஸ் என்ற பல் துலக்கும் கருவி, பார்ப்பதற்கு பாட்டியின் பல் செட் போலவே இருக்கிறது. சீஸ் பிரஷின் மேல் பற்பசையை போட்டு, மேல், கீழ் பற்களில் வைத்து லேசாக கடித்துக்கொண்டு, ‘ஆன்’ செய்தால் போதும். நடுவே இருக்கும் ஒலி அலைகளை எழுப்பும் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். பிரஷின் நார்கள் அதிர்ந்து, நுரை கிளம்பி பற்களின் இண்டு இடுக்குகளை ...

Read More »

சதுப்பு நில பகுதியில் சிக்கியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான முயற்சியின் போது குயின்ஸ்லாந்தின் முதலைகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் சிக்கிய சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலைகள் நிறைந்த பகுதியில் சிக்கிய படகில் வியட்நாமை சேர்ந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படகின் தலைமை மாலுமி மற்றும் அவரின் சகாவை காவல்துறையினர் அழைத்துச்செல்வதை பார்த்ததாக ஏபிசியின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு எதுவுமின்றி காவல்துறையினரின் வாகனத்திற்குள் சென்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். படகு கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் ...

Read More »

சீனாவின் பட்டுப்பாதையில் ஆழமாக புதைந்து போன தென்னிலங்கை!

சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்காக பல நாடுகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்து மா சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளில் சீன திட்டங்கள் மிகவும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக அபிவிருத்தி திட்டங்களானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் காரணமாகியுள்ளது. அவ்வாறான ஒன்று தான் அம்பாந்தோட்டை துறைமுக திட்டமாகும். பல நாடுகளில் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் தனது வெளிப்படை தன்மையை காண்பிக்கும் வகையிலும் சீனா தற்போது செயற்பட தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் , சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின்,கீழ் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தென் ...

Read More »

எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒரு வருடங்களை கடந்து அவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்சியான போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டும் என கோரி தமது போராட்டத்தை பல்வேறு ...

Read More »

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு மரியாதை ரத்து!

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ரத்து செய்யப்படுவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி ராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர் 2 அரசு கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார். ஆளுநர்  மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேசம் விரைவில் வழங்க வேண்டும்!

இலங்கையில் எட்டு மாவட்டங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்க்கமான நீதியை சர்வதேசம் விரைந்து வழங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி நாளைமறுதினம் 30 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் அமைதியான முறையில் பாரிய பேரணி ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை அலுவலகம் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். இந்த அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. எமது எதிர்ப்பின் ...

Read More »

கண்களைக் கெடுக்கும் திரை ஒளி!

தினமும் நாம் பயன்படுத்தும், கணினி, செல்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றின் திரைகளிலிலிருந்து வெளிப்படும், நீல நிற ஒளி, நம் கண்களை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக ‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வந்துள்ள, ஒரு ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. வேதி மாற்றம் இரவில், ஒளிரும் திரையுள்ள கருவிகளை பயன்படுத்துவதால், ‘சர்க்காடியன் ரிதம்’ எனப்படும் நம் உடலின் பகல் -இரவு நேர கதியை உணரும் திறன் பாதிக்கப்படுவதை, ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது துாக்கம், மூளையின் செயல் திறன், உடலியக்கம் போன்றவற்றை பாதிக்கிறது. என்றாலும் திரைக் கருவிகளிலிருந்து வெளியேறும் ஒளியில், ...

Read More »

முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்கிறார்!

சமீபத்தில் பதவி விலகிய ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கோல்ம் டர்ன்புல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று ...

Read More »