குமரன்

இசை என்பதே ஏமாற்றுவேலைதான்!-இளையராஜா

ராத்திரியில் பூத்திருக்கும் பாடலையும் மாங்குயிலே பூங்குயிலே பாடலையும் அந்த மெட்டுக்கு இந்தப் பாட்டு இந்த மெட்டுக்கு அந்தப் பாட்டு என்று மாற்றிப் பாடினார் இளையராஜா. இசையே ஏமாற்றுவேலைதான் என்று ரகசியம் உடைத்தார். மாணவிகள் கரவொலி எழுப்பினார்கள். சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல பாடல்களைப் பாடினார் இளையராஜா. விழாவில், ‘ஜனனி’ பாடலைப் பாடித் தொடங்கினார். அடுத்து மாணவி ஒருவர், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலைப் பாடுங்க ஐயா’ என்று கேட்க, ‘அவதாரம்’ ...

Read More »

ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கி.மீ.க்கு அப்பால் உள்ள தீவுக்கு அனுப்பப்படும் 57 அகதிகள்!

மருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருக்கிறார். தனது கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களை மனுஸ் மற்றும் நவுருத்தீவுப்பகுதிகளில் தடுத்து வைத்திருக்கின்றது ஆஸ்திரேலிய அரசு. அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடும் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு மட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தமாக மாறியது. ...

Read More »

கொழும்பு விரையும் அவுஸ்ரேலிய போர்க் கப்பல்கள்!

சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர். மார்ச் 23ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை இந்தக் கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது.  கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய பிரதி தூதுவர் ஜோன் பிலிப் இந்த தகவலை வெளியிட்டார். “இந்தோ-பசுபிக் முயற்சி-2019 என்ற பெயரிலான இந்தக் கூட்டுப் பயிற்சியில் அவுஸ்ரேலியாவின் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் பங்கேற்கின்றனர். அவுஸ்ரேலிய கடற்படையின், கூட்டு செயலணியைச் சேர்ந்த, கன்பெரா, ...

Read More »

சிறிலங்கா-அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!

சிறிலங்கா  மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் சிறிலங்கா வரவுள்ளன. கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன. அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர். அவர்கள்சிறிலங்காவில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமைத் சேவைகள், கடல்வள பாதுகாப்பு, ...

Read More »

அவுஸ்திரேலிய அணியினருடன் வோர்னர் ஸ்மித் உணர்ச்சிகர சந்திப்பு!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சிக்காக ஒரு வருட தணடனையை அனுபவித்த அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் மீண்டும் அவுஸ்திரேலிய அணியினருடன் இணைந்துகொண்டுள்ளனர் பாக்கிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிற்காக துபாய் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணியினரை சந்தித்துள்ள டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்களுடன் உரையாடியுள்ளனர் டேவிட் வோர்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிவீரர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் கலந்துரையாடினார்கள் பல கேள்விகளிற்கு பதில் அளித்தார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அற்புதமாகயிருந்தது என தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அணியிலிருந்து  விலகயிருந்தோம் என்ற எண்ணமே ...

Read More »

பாலியல் கொடூரங்கள்: காரணிகளை, பின்னணிகளை அலச வேண்டாமா?

எளிதாகச் செய்ய முடிகிறது.  பெண்ணை ஏமாற்றி, அச்சுறுத்தி தங்கள் வலைக்குள் விழவைக்கும் கண்ணிகளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். அதிகாரப் பின்புலம் இந்த அழுகையை அரசியலாக்கக் கூடாது என்பது சரியான கருத்துதான்.  ஆனால், இதன் பின்னே இருக்கும் அரசியலை சொல்லாமல் இருக்கவும் முடியாது.  இந்தக் குற்றத்துக்குப் பின்னே இருப்பவர்களை அடையாளம் காட்டுவதை, அவர்கள் நேற்றுவரைக்கும் எந்தப் பயமுமின்றி இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும், பல பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதை, ஏன் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்பதில் அரசியல் ஆதாயம் இருக்கிறதா ...

Read More »

திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல! – தீபிகா படுகோனே

திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல, எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார். திருமணம் ஆன நடிகைகளை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த வழக்கத்தை சமீபத்தில் உடைத்திருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதுடன், லிப் டு லிப் முத்தக்காட்சி, கவர்ச்சி காட்சிகளில் நடித்து புது டிரெண்ட் உருவாக்கினார். இது ஒர்க் அவுட் ஆனதால் பாலிவுட்டில் தீபிகா ...

Read More »

அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டை தாக்குதல்!

குவீன்ஸ்லந்தைச் சேர்ந்த செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங் (Fraser Anning), இளைஞர் ஒருவரைக் குத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த நேரிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 49 பேர் மாண்ட நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அந்த அவுஸ்திரேலிய செனட்டர் வெளியிட்ட கருத்துகள் உலகளவில் குறைகூறப்பட்டன. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செனட்டர் மீது முட்டை ஒன்றை வீசினார். பதிலுக்கு செனட்டர் அவர் முகத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை குத்தியபோது பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டார். நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்கள் ...

Read More »

அவுஸ்திரேலியப் பேராயருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அவுஸ்திரேலியப் பேராயர் ஜார்ஜ் பெல்லுக்குத் (George Pell), தேவாலயப் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றவாளி என ஆக மூத்த கத்தோலிக்க அதிகாரி பெல் அறிவிக்கப்பட்டுள்ளார். தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறிவரும் அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

Read More »

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் 14 பேருக்கு சிவப்பு பிடியாணை!

இலங்கையர்கள் பலருக்கு சர்வதேச பொலிஸின் (இன்டர்போல) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 6 ஆயிரத்து 872 பேருக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்களில் 14 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த 14 பேரில் 2 முஸ்லிம்கள் அடங்களாக 11 தமிழ் பேசும் இலங்கையர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களுள் 4 பேர் இலங்கை பொலிஸாரினால் தேடப்படுபவர்கள் என்றும் ஏனைய 10 இலங்கையர்களும் வெளிநாடுகளில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் என்றும் ...

Read More »