வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் 14 பேருக்கு சிவப்பு பிடியாணை!

இலங்கையர்கள் பலருக்கு சர்வதேச பொலிஸின் (இன்டர்போல) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 6 ஆயிரத்து 872 பேருக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவர்களில் 14 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த 14 பேரில் 2 முஸ்லிம்கள் அடங்களாக 11 தமிழ் பேசும் இலங்கையர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களுள் 4 பேர் இலங்கை பொலிஸாரினால் தேடப்படுபவர்கள் என்றும் ஏனைய 10 இலங்கையர்களும் வெளிநாடுகளில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.