குமரன்

பிரகீத் எக்னெலிகொட -ட்ரயல் அட் பார் அமைத்து விசாரிக்க கோரிக்கை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நிரந்தர “ட்ரயல் அட் பார்” ஆயம் அமைத்து முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க ஹோமாகம மேல் நீதிமன்றில் “ட்ரயல் அட் பார்” ஆயத்தை அமைக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் பல நாட்களாக மகளின் சடலதின் அருகே படுத்திருந்த தாய்!

பல நாட்களுக்கு முன் இறந்த மகளின் சடலத்தை விட்டு பிரிய முடியாமல், அருகிலேயே அவருடைய தாய் படுத்துறங்கியுள்ள சோக சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எட்வர்ட் – நிக்கோலாஸ் தம்பதியினர். இவர்களுடைய 11 வயது மகள் சோபி அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எட்வர்ட், மனைவி மற்றும் மகளை தனியாக விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். சில நாட்களாகவே சோபி பள்ளிக்கு வராததால், நிர்வாகத்திலிருந்து பல முறை போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் நிக்கோலாஸ் எந்த பதிலும் கொடுக்கவில்லை. ...

Read More »

அதிகாரம் இல்லாத ஜனாதிபதி பதவிக்காக, ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?

ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன்னமும் அங்கிகரிக்கவில்லை. கோட்டா, உண்மையிலேயே, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கருணை கொலையான அம்மாவைப் பற்றி மகள் கண்ணீர்….!

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் அவதிபட்டு வந்த தாயின் வலிகளை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மகள்கள், அவருக்கு சிரமம் இல்லாமல் விடை கொடுத்திருக்கும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெர்ரி ராபர்ட்சன்(61). இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்த வந்த போதும், எலும்புகள், நுரையீரல், கல்லீரல், இதயம் என அனைத்துப் பாகங்களுக்கு படிப்படியாக புற்றுநோய் பரவியது இதன் காரணமாக உடல்வலியால் மிகக்கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தார். தொடர்ந்து மேற்கொண்டு வந்த கீமோதெரபி, லேசர் ...

Read More »

காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்- ஐநா ஆழ்ந்த கவலை

காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐநா இதன் காரணமாக மனித உரிமை நிலை மோசமடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஓளிநாடாவில் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். காஸ்மீரில் சில நாட்களிற்கு முன்னர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கலாம் என நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். உடன்படுவதற்கு மறுப்பவர்களை அடக்குவதற்காக  இந்திய அதிகாரிகள்  தொலைத்தொடர்பு வலையமைப்புகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முடக்கிவந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் ...

Read More »

அமைச்சரவைத் தீர்மானங்கள் !

கடந்த 2019.08.06 செய்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, 01. இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புத் துறையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 8 ஆவது விடயம்)  சமத்துவ அடிப்படையிலும் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாக கொண்டும் விஞ்ஞான தொழில்நுட்பம் புதிய உற்பத்தி தயாரிப்புத் துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து ...

Read More »

த.தே. கூ.வினால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை!

போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் ...

Read More »

கோத்தபாய களமிறங்கினால் போட்டியாளராக பொன்சேகா!

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உண்டு. எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சிறிலங்கா பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...

Read More »

சசிகுமார், சமுத்திரக்கனியுடன் நடிக்கும் ஜோதிகா!

ஜோதிகா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகா திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இரண்டாவது இன்னிங்சில் தான் என் மனதுக்கு நெருக்கமான படங்களாக அமைகின்றன என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்‘, ‘காற்றின் மொழி’ என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான ‘ராட்சசி’ படத்திற்கும் நல்ல ...

Read More »

தமிழர் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மீண்டுமோர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிக்கந்த பிரதேச செயலக எல்லைகுட்பட்ட பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயம்  மட்டக்களப்பு  வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ்வாலயம் சம்மந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.       1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வளிபடப்பட்ட ...

Read More »