பிரகீத் எக்னெலிகொட -ட்ரயல் அட் பார் அமைத்து விசாரிக்க கோரிக்கை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நிரந்தர “ட்ரயல் அட் பார்” ஆயம் அமைத்து முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க ஹோமாகம மேல் நீதிமன்றில் “ட்ரயல் அட் பார்” ஆயத்தை அமைக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.