பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு உங்களிடம் மீண்டும் எனது கோரிக்கையை கடிதம் மூலமாக முன்வைக்கின்றேன். இது தொடர்பில் தீர்க்கமான முறையில் சிந்தித்துப் பார்க்குமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். நீங்கள் இது தொடர்பில் தெரிவிக்கவுள்ள பதிலை நானும் பொதுமக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்று எதிரணி வேட்பாளர் கோத்தாவிடம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் நேற்றைய தினம் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
Read More »குமரன்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் !
விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான அதிநவீன சமையல் சாதனத்தை சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான மாவு, ‘மைக்ரோவேவ் அவன்’ (அதிநவீன சமையல் சாதனம்) ஆகியவை அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் ...
Read More »அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்!
வினோத் இயக்கும் தல 60 படத்திற்கு பின் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு அன்றே படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு குழு அறிவித்துவிட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை ...
Read More »பாம்பு பிடிப்பவரை ஆக்ரோஷமாக துரத்திய பாம்பு!
அவுஸ்திரேலியாவில் பாம்புகளைப் பிடிப்பவர் ஒருவரை கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய நிலையிலும், அவர் அதற்கு ஆதரவாக பேசியுள்ளார். வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் அந்த பாம்பு அவரை ஆக்ரோஷமாக துரத்துவதைக் காண முடிகிறது. தரையிலிருந்து சில அடி உயரத்திற்கு எழும்பி அது அவரைத் துரத்துவதுடன், வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, நச்சுப் பற்கள் தெரிய அவரை கொத்தவும் பாய்கிறது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Tony Harrison (52) என்னும் அந்த பாம்பு பிடிப்பவர், அது தன்னை அவ்வளவு ஆக்ரோஷமாக துரத்தியும், வழக்கமாக இவ்வகை பாம்புகள் ...
Read More »இந்தியாவின் புதிய வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வசாரத், சில்ஹாஸ் மற்றும் பழங்குடியினர் பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும், மாநில ...
Read More »ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் இன்று காலை நேரடியாக கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.
Read More »முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்குக் கேட்கின்றார்கள்!
ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச அணியினர் முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்கு கேட்கின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஜானாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை (1) வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று இல்லாதபொல்லாத பொய்களைச் சொல்லியும், அச்சமூட்டியும் கோத்தாவை வெல்ல வைக்க வாக்குக் கேட்டுத் திரிவதை காணமுடிகின்றது. ...
Read More »தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை பருவம் முதல் தனது அரசியல் வாழ்க்கை வரை தான் கடந்து வந்த பாதைகளை கருணாநிதி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் ...
Read More »கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கு புத்துயிர்!
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர் செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழில் – அ. ரஜீபன் 1கேள்வி- இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எப்படி உங்களை இணைத்துக்கொண்டீர்கள் என்பது குறித்தும் தெரிவிக்க முடியுமா? பதில்- ...
Read More »தாய்லாந்து நாட்டில் “தாய்” மொழியில் உருவெடுத்த திருக்குறள்!
உலகப் பொதுமறையான திருக்குறளை தாய்லாந்து நாட்டு “தாய்” மொழியில் இன்று வெளியிடப்படுகிறது. தாய்லாந்தின் பேங்கொங் நகரில் ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி “தாய்” மொழியில் திருக்குறளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்னும் கலந்து கொள்கிறார். உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை தாய்லாந்து மொழியில் வைத்தியர் சுவிட் மொழிபெயர்த்துள்ளார். இவர் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			