கோத்தாவுக்கு கடிதம் அனுப்பினார் சஜித்!

பகி­ரங்க விவாதம் ஒன்­றுக்கு வரு­மாறு உங்­க­ளிடம் மீண்டும் எனது கோரிக்­கையை கடிதம் மூல­மாக முன்­வைக்­கின்றேன்.   இது தொடர்பில் தீர்க்­க­மான முறையில்  சிந்­தித்துப் பார்க்­கு­மாறு உங்­க­ளி­டம் கோரிக்கை விடுக்­கின்றேன். நீங்கள் இது தொடர்பில் தெரி­விக்­க­வுள்ள பதிலை நானும் பொது­மக்­களும் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்   என்று  எதிரணி வேட்பாளர் கோத்தாவிடம் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இது தொடர்­பாக அவர் நேற்­றைய தினம் பொது­ஜனப் பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து,

தமது அடுத்த ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் இம்­மாதம் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் மக்கள் தமது வாக்­கு­களை அறி­வு­பூர்­வ­மா­கவும் ஆழ­மாக சிந்­தித்தும் அளிப்­ப­தற்கு நாம் சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்­டு­மென நம்­பு­கிறேன்.

எமது கொள்­கை­கள்இ திட்­டங்கள்  என்­ப­வற்றை மக்­க­ளுக்கு மிகவும் தர்க்க ரீதி­யாக முன்­வைப்­ப­தற்கு பகி­ரங்க விவாதம் ஒன்­றுக்கு வரு­மாறு உங்­க­ளுக்கு நான் அண்­மையில் அழைப்பு விடுத்தேன். துர­திஷ்ட வச­மாக உங்கள் தரப்­பி­லி­ருந்து எனக்கு இன்னும் விவாதம் தொடர்­பான பதில் எதுவும் கிடைக்­க­வில்லை. அதற்­காக உங்­க­ளி­ட­மி­ருந்து ஒரு பதில் கிடைக்கும் வரை நான் காத்­தி­ருக்­கிறேன். நவீன ஜன­நா­யக கட்­ட­மைப்பில் உலக நாடு­களின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் எந்­த­வி­த­மான தடு­மாற்­ற­மு­மின்றி தமது கொள்­கைகள் தொடர்­பாக நேர­டி­யான விவா­தங்­களின் பங்­கேற்­கின்­றனர். தற்­போது அது போன்ற விவா­தங்கள் தொலைக்­காட்­சி­க­ளிலும் சமூக ஊட­கங்­க­ளிலும் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன.

 

உங்­க­ளுக்கு இது தொடர்பில் எழுத்து மூல அழைப்­புக்கு கிடைக்­க­வில்லை என ஒரு­சிலர் கூறி­வ­ரு­கின்­றனர். தொழில்­நுட்ப மற்றும் டிஜிட்டல் முறைமை பரந்து பட்டு காணப்­ப­டு­கின்ற ஒரு சமூ­கத்தில் உங்கள் தரப்­பினர் இந்த இவ்­வா­றான விட­யத்தை முன்­வைக்­கின்­றனர்.

எனவே உங்­க­ளிடம் மீண்டும் எனது கோரிக்­கையை இந்த கடிதம் மூல­மாக முன்­வைக்­கின்றேன். எமது தாய்மண் தொடர்­பாக நீங்கள் வகிக்கும் கொள்கை என்ன? உங்கள் கொள்கை தொடர்­பாக நான் எவ்­வா­றான நிலைப்­பாட்டை கொண்­டுள்ளேன். என்­பவை தொடர்­பாக பகி­ரங்க விவா­தத்தில் மக்­க­ளுக்கு தெ ளிவு கிடைக்கும். எனவே இது தொடர்பில் தீர்க்கமான முறையில் இதை சிந்தித்துப் பார்க்குமாறு உங்களிடமும் உங்கள் ஆலாசகர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். நீங்கள் இது தொடர்பில் தெரிவிக்கவுள்ள பதிலை நானும் பொதுமக்களும் மிகவும் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .