குமரன்

நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறுவர்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நரபலி கொடுக்கப்பட்ட  சிறுவர்களின் உடல் எச்சங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்களே இவ்வாறு பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோவிற்கு அருகே கண்டெடுத்துள்ளனர்.         இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் ...

Read More »

தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்!

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவது என்றால் என்ன? தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படையில் மேற்படி மூன்று தரப்புக்களிடமும் ...

Read More »

ஜெயம் ரவி படத்தில் ஈரானிய நடிகை!

அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்திற்குப் பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்‌ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நித்தி அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில் டி இமான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26ஆவது படத்தில் ஜெயம் ...

Read More »

பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார்! இரு குழந்தைகளும் கதறினார்கள்!

ஈழ  தமிழ்   தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழ   தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரி போரடி வரும் ஹோம் டு பைலோ அமைப்பு தனது டுவிட்டர் மற்றும் முகநூல்களில் இதனை தெரிவித்துள்ளது. நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஆதரவாளர்கள் விமானநிலையம் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது ...

Read More »

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் தீக்குளித்த அகதி !

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 36 வயது பாகிஸ்தான் அகதி தீக்குளித்த நிலையில், அவுஸ்திரேலிய வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தீக்குளித்த அவர் உயிருக்கு ஆபத்தான சூழலில் நவுருத்தீவிலிருந்து விமானம் வழியாக பிரிஸ்பேனுக்கு (அவுஸ்திரேலியா) அழைத்து செல்லபட்டார் என அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார். நவுருவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அகதிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் ஐன் ரிண்டோல். கடந்த 2016ம் ஆண்டு, தீக்குளித்த ஈரானிய அகதி முறையான ...

Read More »

பேராயர் ஜஸ்டின் வெல்பி சிறிலங்கா பயணம்!

அங்கிலிக்கன் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டு இன்று (29) காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரது விஜயத்தில், அவருடைய பாதிரியார் உள்ளிட்ட மேலும் சிலர் வருகைதந்துள்ளனர். இவர்களை,  அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளனர். பேராயர் உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 31 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளனர். அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டு ...

Read More »

மஹிந்த – தயாசிறி – கோட்டா சந்திப்பு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, மற்றும் அக்கட்சியின் பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

Read More »

ஜனாதிபதித் தேர்தல்; இலவு காத்த கிளியின் கதை

எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு ...

Read More »

டிரம்ப் மனைவி, வடகொரியா தலைவர் ரகசிய சந்திப்பா?

ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியாவும், வடகொரிய தலைவரும் இதுவரை தனியே சந்தித்ததில்லை” என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. பிரான்சில் நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டுக்கு இடையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா உடனான விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், “பல்வேறு வளம் மற்றும் திறன் கொண்ட நாட்டை கிம் ஜாங் அன் நிர்வகித்து வருகிறார். அவரை பற்றி எனக்கும், எனது மனைவிக்கும் நன்கு தெரியும்” என கூறினார். வடகொரிய தலைவர் குறித்து, மெலானியாவுக்கு நன்கு தெரியும் என டிரம்ப் பேசியது பரபரப்பை ...

Read More »

தலைப்பை மாற்ற மாட்டேன் – பிரியா வாரியர் பட இயக்குனர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற தலைப்பை மாற்ற மாட்டேன் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கண்சிமிட்டல் பிரபலமான பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் பிரியா வாரியர் தன்னை ஸ்ரீதேவி என்று அறிமுகப்படுத்துகிறார். சிகரெட் பிடிக்கிறார். மது அருந்துகிறார். குளியல் தொட்டியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது. நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையையும் ...

Read More »