குமரன்

மனநிலையை கண்டறியும் EQ ரேடியோ கண்டுபிடிப்பு

உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்து விட்ட போதிலும் ஒருவர் மனநிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய எவ்வளவு பெரிய திறமைசாலியாலும் முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதனை ஓரளவு நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதுவே துக்கமாக அல்லது சோகமாக இருந்தால் அதனை நம்மால் எளிதில் உணர முடியாது. இந்நிலையில் ஒருவரின் மனநிலை எப்படி உள்ளது? என்பதைக் கண்டறியும் புதிய கருவியை அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ...

Read More »

அவுஸ்ரேலியா தொடரில் இருந்து கிறிஸ் மோரிஸ் நீக்கம்

தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் முழங்கால் காயத்தால் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இவர் கடந்த 8 மாதங்களாக முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வருகிற 30-ந்திகதி முதல்வி அவுஸ்ரேலியாவிற்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் இடம் பிடித்திருந்தார். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அவரது காயம் குறித்து ...

Read More »

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழங்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை Times Higher Education (THE)  வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே University of Oxford-United Kingdom, California Institute of Technology-United States,        Stanford University-United States ஆகிய பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. University of Melbourne: 33 Australian National University: 47 University of Queensland: 60 University of Sydney: 60 Monash University: 74 University of NSW: ...

Read More »

ஒபாமாவை கவர்ந்த 6 வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்

சிரியா சிறுவன் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் ...

Read More »

எழுக தமிழ்! கொள்கையை ஏற்றுக்கொண்டால் எவரும் வரலாம்

தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் பேரணியில் கலந்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை எந்த வித அரசியல் சார்பும் இன்றி அனைத்து தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளும் நிகழ்வே இதுவெனவும் அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையினில் நாளை நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எந்த வித அரசியல் ...

Read More »

இசைக்குயில் எஸ்.ஜானகி ஓய்வு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, கொங்கணி, துளு, ஒடியா, சவுராஷ்டிரா, ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட 15 மொழிகளில் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது குழலினும் இனிய குரலுக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி, 45 ஆயிரத்துக்கும் அதிகமான சினிமா மற்றும் பக்தி பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்துள்ளார். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்தியவதி ...

Read More »

50 யாஹூ கோடி பயனாளிகளின் ரகசிய தகவல்கள் திருட்டு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் யாஹூ பயனாளிகளின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் களவாடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி மறைந்துள்ளதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதள தேடுபொறிகளில் ஜாம்பவானான ’யாஹூ’வை பயன்படுத்திவந்த சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ’ஹேக்கர்’ எனப்படும் இணையதள ஊடுருவலாளர்களால் களவாடப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கடவுச்சொற்களை மாற்றியமைத்துக் கொள்ளும்படி யாஹூ நிறுவனம் அறிவித்தது. இந்த ஊடுருவல் தொடர்பாக புலனாய்வு விசாரணையிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது, இந்நிலையில், ...

Read More »

ஐ.நா வில் அவுஸ்ரேலிய அகதிகள் பற்றி பேசப்பட்டது

நாட்டின் எல்லைப் பாதுகாப்பை எப்படி இறுக்கமாகப் பேணுவது என்பதை அவுஸ்ரேலியாவின் முன்னுதாரணத்திலிருந்து ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் Malcolm Turnbull மற்றும் குடிவரவு அமைச்சர் Peter Dutton ஆகியோர் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நவுறு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் காணப்படும் நிலமைகள், படகுகளைத் திருப்பி அனுப்புதல், குறைந்தளவான அகதிகளை உள்வாங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் Save the Children, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பிரித்ததானியார்களே அதிகம்

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை அடிப்படையாக வைத்து எந்தெந்த வெளிநாடுகளில் பிறந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் அதிகம் வாழ்கிறார்கள் என்ற தரவு ஒன்றை சென்சஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிரித்ததானியா முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் இருக்கின்ற அதேநேரம் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது.

Read More »

அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா

தனக்கு அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளைஞர் கடத்தல் தொடர்பான வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தன்னை அறியாமல் இடம்பெற்ற ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் நடவடிக்கைகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு வராமல் தனது தொழிலையேசெய்து கொண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுவதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ...

Read More »